சென்னையில் மெரினா, பேசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகள் பிளாஸ்டிக் இல்லாத கடற்கரை பகுதிகளாக பராமரிக்கப்படுகிறது. இதற்காக மாநகராட்சி சார்பில் கடற்கரை பகுதிகள் சுகாதார அலுவலகர் தலைமையில் தினசரி 2 வேளைகளில் ஆய்வு செய்யப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதிலும் மெரினா கடற்கரை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தும் கடைகள் மற்றும் குப்பைகளை கொட்டும் நபர்களை கண்காணிக்க மண்டல அலுவலக தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் தேசிய நகர்புற […]