Categories
மாநில செய்திகள்

“மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்”… தமிழக அரசுக்கு சசிகலா வலியுறுத்தல்…!!!!!

சென்னை மாநகரம் முழுவதும் நடைபெறும் மழை நீர் வடிகால் சீரமைப்பு பணிகளாலும் மெட்ரோ ரயில் பணிகளாலும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு கொண்டிருக்கின்றார்கள். அனைத்து பகுதிகளிலும் எங்கு பார்த்தாலும் பெரிய பள்ளங்கள் ஒருபுறம் மெட்ரோ பணிகளுக்காக பாதையை மறைத்து வைத்திருப்பது மறுபுறம் பார்க்க முடிகிறது. இப்படி ஒவ்வொரு நாளும் சென்னை வாசிகள் வீட்டை விட்டு வெளியே சென்று மீண்டும் வீட்டிற்கு திரும்புவதற்கு மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க வேண்டி இருக்கிறது. இது போன்ற பணிகள் மெத்தனமாகவும் நடைபெறுவதை பார்க்கும் போது […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: அக். 2 & 9 டாஸ்மாக் மூடல் – அதிரடி அறிவிப்பு …!

சென்னையில் காந்தி ஜெயந்தி,  மிலாடி நபியை ஒட்டி டாஸ்மார்க் கடைகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார். அக்டோபர் 2 மற்றும் 9 ஆகிய தேதிகளில் டாஸ்மார்க் கடைகள் மூடப்படும் என்று தற்பொழுது அறிவிப்பானது வெளியிட வெளியாகி இருக்கிறது.  காந்தி ஜெயந்தியை முன்னிட்டும்,  மிலாடி நபியை முன்னிட்டும் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மார்க் மதுபான சில்லறை விற்பனை கடைகளும் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். தடையை மீறி மதுபான விற்பனையில் ஈடுபட்டால் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் அடித்த 2 மணி நேரத்துக்கு…. மக்களே உஷாரா இருங்க… இது உங்களுக்கான எச்சரிக்கை ..!!

சென்னையில் ஆவடி, செங்குன்றம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, கேகே நகர், கோடம்பாக்கம், வடபழனி, நுங்கம்பாக்கம், அசோக் நகர் உள்ளிட்ட இடங்களில் தற்போது தொடர்ச்சியாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. முன்னதாக மிதமான மழை தொடரும் என சொல்லப்பட்ட நிலையில, தற்பொழுது கனமழையாக பெய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு இந்த கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மட்டுமல்லாமல் திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் அடுத்த […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

BREAKING: சென்னையில் 2 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு …!!

சென்னையில் அடுத்த 2 மணி நேரத்துக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னையில் 2 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. சென்னையில் அரை மணி நேரத்திற்கு மேலாகவே தொடர்ந்து இடியுடன் கூடிய கனமழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு சென்னையில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. சென்னை மட்டும் இன்றி திருவள்ளூர், […]

Categories
மாநில செய்திகள் வானிலை

15 மாவட்டங்களில்…. “இன்று வெளுத்து வாங்கப்போகும் மழை”…. எங்கெல்லாம்?

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில், இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய 15 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: சென்னையில் 4000 போலீசார் குவிப்பு …!!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு மத்திய அரசு தடை விதித்திருக்கக்கூடிய நிலையில் சென்னையில் மட்டும் 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. எந்த ஒரு அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கபட்டு இருப்பதாகவும் சென்னை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை புரசைவாக்கம் பகுதியில் அமைந்திருக்கக்கூடிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்று அமைப்பின் தலைமை அலுவலகம் மட்டுமல்லாமல்,  அதற்கு தொடர்புடையவர்கள் மற்றும் அதனுடைய துணை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

போலீசை வெட்டிவிட்டு தப்ப முயன்ற பிரபல ரவுடி….. துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்த போலீஸ்……!!!!

சென்னையை அடுத்த ராஜகோபால் கண்டிகை எருமையூரை சேர்ந்த ரவுடி சச்சின் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் வழக்கு தொடர்பாக போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இதரிடையே ஒரு கல்லூரியின் பின்புறம் காட்டு பகுதியில் ரவுடி பதிவு இருப்பதாக தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் போலீஸ் குழுவினர் ரவுடியை பிடிக்க சென்றனர். அப்போது ரவுடி சச்சின் காவலர் பாஸ்கரை இடது தோள்பட்டையில் கத்தியை கொண்டு பலமாக வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி செய்தார்.அப்போது உடனடியாக […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மரணம் : ஐகோர்ட் அதிரடி உத்தரவு …!!

கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தெரிவித்திருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணம் தொடர்பான விசாரணை குறித்து அவரது தந்தை ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு ஏற்கனவே சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதால் இந்த வழக்கை ஏன் முடித்து வைக்க கூடாது என்று நீதிபதி மனுதாரர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

2 கால்களை தொங்கவிட்டு பேருந்தில் சாகசம்…. 3 பிரிவுகளின் கீழ் பிளஸ் 1 மாணவன் கைது….!!!!

சென்னை மாநகர பேருந்தில் தொங்கியபடி சாகச பயணம் செய்த பள்ளி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பாரிமுனையில் இருந்து திருவெற்றியூர் நோக்கி மாநகர பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்போது அந்த பேருந்தில் பயணம் செய்த மாணவர் ஒருவர் படிக்கட்டில் நின்றபடி ஆபத்தான பயணத்தை மேற்கொண்டார். அது மட்டுமல்லாமல் படிக்கட்டில் தொங்கியபடி இரண்டு கால்களையும் தரையில் உரசி சாகசம் செய்தார். அதனை பயணி ஒருவர் தவறு செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நிலையில் அந்த […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

11 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல் …!!

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை விலக தொடங்கி இருக்கின்றது. கடந்த ஜூன் மாதம் ஆரம்பிச்சு ஜூன், ஜூலை, ஆகஸ்ட்,  செப்டம்பர் என இந்த மாதம் வரைக்கும்,  பல இடங்களில் கனமழை பெய்து முடிஞ்சு இருக்கு. குறிப்பாக தென்னிந்தியாவில் பல மாநிலங்களிலும் அதிக கன மழை பொழிந்துள்ளது. அதிலும் குறிப்பாக சொல்லணும்னா, தமிழகத்தில் இயல்பை விட தென்மேற்கு பருவமழை காலத்தில் ( பொழிய வேண்டி விட இயல்பை விட)  அதிகமாக 51% மழை பதிவாகி இருக்கு. தென்மேற்கு பருவமழை தென்மேற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தற்கொலை செய்து கொண்ட தீபா…. “காதலனிடம் போலீசார் 3 மணி நேரம் விசாரணை”….!!!!!!

தற்கொலை செய்து கொண்ட தீபாவின் காதலினிடம் போலீசார் மூன்று மணி நேரம் விசாரணை மேற்கொண்டார்கள். ஆந்திர மாநிலத்தை பூர்விகமாக கொண்ட பிரபல நடிகை பவுலின் ஜெசிகா என்கின்ற தீபா திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் விஷாலின் துப்பறிவாளன், ராட்சசன், தெறி உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றார். இந்த நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து போலீசார் தீபாவின் உடலை மீட்டு தற்கொலைக்கான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை விமான நிலையத்தில்…. “50 தனியார் பாதுகாப்பு படைவீரர்களுக்கு பணியமனம்”….!!!!!

சென்னை விமான நிலையத்தில் முக்கியத்துவம் இல்லாத இடங்களில் தனியார் பாதுகாப்பு படை வீரர்கள் 50 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். சென்னையில் உள்நாடு மற்றும் பன்னாட்டு விமான நிலையங்களில் 1500 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்நிலையில் மத்திய அரசு விமான நிலையங்களில் பாதுகாப்பை மாற்றி அமைக்க முடிவு செய்ததை தொடர்ந்து விமான நிலையத்தில் பாதுகாப்பு மிகுந்த முக்கியமான இடங்களில் மட்டும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் முக்கியம் இல்லாத […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இன்று 17….. நாளை 11…. வெளுத்து வாங்கப்போகும் மழை…. எந்தெந்த மாவட்டங்கள்?.. இதோ.!!

தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களிலும், நாளை 11 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 27.09.2022 : தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பெரம்பலூர், அரியலூர், […]

Categories
மாநில செய்திகள்

என்ன நிகழ்ச்சி நடத்துறீங்க?…. “திடீர்னு மேடையிலிருந்து கிளம்பிய அமைச்சர்”….. அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்…. என்ன நடந்தது?

ஏற்பாடுகள் சரியில்லை என்று அரசு நிகழ்ச்சி ஒன்றை அமைச்சர் மா சுப்பிரமணியன் திடீரென புறக்கணித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுதும் உள்ள 45 சுகாதார மாவட்டங்களில் நடத்தப்படக்கூடிய காய்ச்சல் முகாம்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பதை ஆய்வு செய்யும் வகையிலும், அதே போல சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கும் வகையிலும் தமிழக சுகாதாரத் துறை சார்பில் சென்னை எழும்பூரில் இருக்கக்கூடிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பயிற்சி மையத்தில் இன்று காலை 10 மணி அளவில் […]

Categories
மாநில செய்திகள்

அரசு நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

உரிய ஏற்பாடு செய்யவில்லை என்பதால் அரசு நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். சென்னை எழும்பூரில் பருவகால காய்ச்சல்களை கட்டுப்படுத்த மருத்துவத் துறையின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதாவது, எழும்பூரில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பருவ கால காய்ச்சல்களை கட்டுப்படுத்துவது தொடர்பான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அங்கு வந்து மேடையில் உட்கார்ந்திருந்தார். அப்போது நிகழ்ச்சியில் நேரடியாக 1,000 மருத்துவர், செவிலியர் கலந்து கொள்வதாக கூறப்பட்ட நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆயுத பூஜை தொடர் விடுமுறை…. “சென்னையிலிருந்து புறநகரங்களுக்கான விமான டிக்கெட் அதிகரிப்பு”…. பயணிகள் அதிர்ச்சி…!!!!!

ஆயுத பூஜை தொடர் விடுமுறை என்பதால் சென்னையிலிருந்து பிற நகரங்களுக்கான விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதால் பயணிகள் அதிர்ச்சடைந்துள்ளார்கள். சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தொடர்ந்து திங்களைத் தவிர்த்து 4-ம் தேதி செவ்வாய்க்கிழமை ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. மறுநாள் 5-ம் தேதி விஜயதசமி கொண்டாடப்படுகின்றது. தொடர் விடுமுறை வருவதால் வரும் 30-ம் தேதி முதல் சென்னையில் வசிப்பவர்கள் அவரவர்களின் சொந்த ஊர் நோக்கி படையெடுப்பார்கள். இதனால் ஏற்கனவே பேருந்து மற்றும் ரயில்களில் முன்பதிவு முடிந்து விட்டது. இதில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நீர்வளத்துறை அதிகாரியிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் போல் நடித்து பணம் பறிக்க முயற்சி”…. மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு….!!!!!

நீர்வளத்துறை அதிகாரியிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் போல் நடித்து பணம் பறிக்க முயன்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டையை சேர்ந்த அசோகன் என்பவர் நீர்வளத் துறை அலுவலகத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகின்றார். இவர் அலுவலகத்தில் இருந்த பொழுது காரில் வந்து இறங்கிய மர்ம நபர், நான் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் எனவும் நீங்கள் லஞ்சம் வாங்கியதாக புகார் வந்திருக்கின்றது. அதன் பேரில் உங்களை விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தையே உலுக்கிய பலாத்காரம்…. 26 பேரால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்….. பரபரப்பு தீர்ப்பு….!!!!

சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்து 2020 ஆம் ஆண்டு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபட்ட வழக்கில் மொத்தம் 26 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில் நான்கு பேர் தலைமறைவாகி விட்டதாக போலீசார் தெரிவித்தனர். அதில் ஒருவர் விசாரணை காலத்தில் உயிரிழந்து விட்டார். மீதம் இருந்த 21 பேர் குற்றவாளிகள் என போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி ராஜலட்சுமி அண்மையில் தீர்ப்பு வழங்கினார். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

3 நாட்கள்…. “23 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை”…. மீனவர்களுக்கு எச்சரிக்கை…!!

தமிழகத்தில்  23 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 26.09 2022 முதல் 28.09.2022 வரை : தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் தயாராகும் “IPHONE 14″…. ஓரிரு நாட்களில் அறிமுகம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

பிரபலமான ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 மாடலை செப்டம்பர் 7-ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த போன் கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. அந்த வகையில் கூடிய விரைவில் சென்னையிலும் ஐபோன் 14 மாடல் அறிமுகமாக இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே பிரச்சனை நடந்து வருகிறது. இதன் காரணமாக ஐபோன் நிறுவனம் தன்னுடைய உற்பத்தியை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.  இதன் ஒரு பகுதியாக சென்னை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை உலுக்கிய….. 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு….. “8 பேருக்கு ஆயுள்”….. 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை…. ஐகோர்ட் அதிரடி..!!

15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய வழக்கில் சிறுமியின் உறவினர்கள் 6 பெண்கள் உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிழில் ஈடுபட வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சிறுமியின் உறவினர்கள் சகிதா பானு, உடந்தையாக இருந்த காவல் ஆய்வாளர் புகழேந்தி, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர், பாஜக பிரமுகர் ராஜேந்திரன், நாகராஜ், மாரீஸ்வரன், பொன்ராஜ் மற்றும் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

அலர்ட்..! 23 மாவட்டங்களில்…. 3 நாட்களுக்கு வெளுக்கப்போகும் கனமழை….. எங்கெல்லாம்?

தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்ச்சியின் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று […]

Categories
மாநில செய்திகள்

பண்டிகை காலம்….. 2 மடங்காக உயர்ந்த விமான டிக்கெட் விலை…. அதிர்ச்சியில் பயணிகள்….!!!!

இந்துகளின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஆயுத பூஜை. இந்த ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. அதன் மறுநாள் 5 ஆம் தேதி விஜய தசமி கொண்டாடப்பட உள்ளது. இதனால் திங்கட்கிழமை தவிர்த்து சனி, ஞாயிற்றுக்கிழமை என ஆயுத பூஜையை முன்னிட்டு தொடர் விடுமுறைகள் என்பதால் சென்னையில் வசிப்பவர்கள் வருகின்ற 30ஆம் தேதி முதல் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்படுவார்கள் இதனால் பஸ் ரயில்களின் ஏற்கனவே முன்பதிவு முடிந்துவிட்டது. எனவே பஸ், ரயில்களின் டிக்கெட் கிடைக்காத […]

Categories
மாநில செய்திகள்

மழைக்காலங்களில்….. “கண்டிப்பாக இதையெல்லாம் செய்ய வேண்டும்”….. அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியது என்ன?

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறுதுறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரியுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.. சென்னை கலைவாணர் அரங்கில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து பல்வேறுதுறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரியுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.. அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, பருவமழையை எதிர்கொள்ள போர்க்கால அடிப்படையில் நீங்கள் முனைப்போடு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏற்கனவே தொடக்கத்தில் சொன்னது போலவே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்களும், மானிட்டரிங் அலுவலர்கள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

எப்போதும் ஆன்லைன் ரம்மி…. கணவனை திருத்த மனைவி எடுத்த பகீர் முடிவு….. சோகம்…..!!!

சென்னையில் உள்ள பல்லாவரம் என்ற பகுதியைச் சேர்ந்த ஞான செல்வம் மற்றும் வகித்தாபுலோரா என்ற தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இதனிடையே ஞான செல்வன் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்துள்ளார். அதனால் கணவர் மனைவி இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் மனம் உடைந்த மனைவி அறையில் உள்ள மின்விசிறியில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அறையில் மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த கணவன் ஞான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மாணவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் சலுகை வழங்க நடவடிக்கை”…. மெட்ரோ நிர்வாக இயக்குனர் தகவல்….!!!!!

சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் சலுகை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் கூறி உள்ளார். சென்னையில் மெட்ரோ ரயில் பொருத்தவரையில் சராசரியாக தற்போது 42 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் 2 லட்சத்து 30 ஆயிரம் பயணிகள் பயனடைகிறார்கள். இதில் பெரிதும் பயன்பெறுபவர்கள் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், கல்லூரி மாணவர்களாவர். இவர்களுக்கு 20% வரை கட்டண சலுகையும் வழங்கப்படுகின்றது. இந்த நிலையில் பயணிகளின் எண்ணிக்கையை மேலும் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

OMG: தூக்கு மாட்டுவது எப்படி?…. சிறுவனின் விளையாட்டு விபரீதமான சோகம்….!!!!!

சென்னை புழல் அடுத்த புத்தகரம் காமராஜர் என்ற பகுதியில் கார்த்திக் என்ற 11 வயது சிறுவன் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து சிறுவனை மீட்ட பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த சிறுவன் கார்த்திக் அவரின் சகோதரனும் வீட்டில் கண்ணாம்பூச்சி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது தூக்கு மாட்டுவது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு…… “சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் போலீஸ்”…!!!!!

கோவையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால்  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீஸ் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டிருக்கின்றது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகம் ஆகிய இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு, அரசு வாகனங்கள் மீது கல்வீச்சு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றதன் காரணமாக சென்னையில் இருக்கும் தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் சென்னையில் இருக்கும் பல முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதன்படி எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தற்கொலைதான் முடிவா…? லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பால் கண்ணீர் விடும் பெண்…!!!!!

சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சம்பக்(33) இவர் 33 வயது உடைய பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றில் கடந்த ஒரு வருடமாக வசித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அந்த பெண் தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவருடைய உறவினர்கள் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். இது குறித்து அந்த பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சம்பக் தன்னை தற்கொலைக்கு தூண்டியதாக கூறியதையடுத்து போலீசார் அவர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மாணவர்களே உஷார்…. இனி ரயிலில் இதற்கெல்லாம் தடை…. திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள காத்திருப்பு அறைகள், நடைமேடைகள் மற்றும் ரயில் பெட்டிகள் என அனைத்திலும் நேற்று திடீரென சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனைக்குப் பிறகு ரயில்வே போலீசார் சார்பில் ரயில்களில் கொண்டு வரும் தடை செய்யப்பட்ட பொருட்கள், கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்கள்,சந்தேகப்படும் படியான நபர்கள் குறித்து மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக ரயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் பலரும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஒரே அகழாய்வில் 4 நாகரிகங்களை பிரதிபலிக்கும் பழமையான பொருட்கள்”…. வடக்குப்பட்டு கிராமத்தில் கண்டெடுப்பு….!!!!!!

சென்னையை அடுத்த வடக்குபட்டு கிராமத்தில் ஒரே அகழாய்வில் நான்கு நாகரிகங்களை பிரதிபலிக்கும் பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. சென்னை மாவட்டத்தை அடுத்திருக்கும் வடக்குபட்டு கிராமத்தில் வரலாற்று மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொல்பொருள் ஆர்வலர்கள் பல்வேறு வருடங்களாக தொடர் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த நிலையில் அகல ஆய்வு நடைபெற்ற குழியில் 75 சென்டிமீட்டர் ஆழத்தில் விலங்குகளை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கல்லாலான கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை இடைக்காலத்துக்கும் புதிய கற்காலத்துக்கும் இடையேயான காலகட்டத்தில் 12 ஆயிரம் வருடங்களுக்கு முந்தையது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பிளஸ்-1 மாணவி”…. பள்ளியை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்….!!!!!

பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்தது தொடர்பாக ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளியை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள பல்லாவரம் அடுத்திருக்கும் பொழிச்சலூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த லதா என்பவரின் மகள் ஹரிணி பல்லாவரத்தில் இருக்கும் அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்துள்ளார். இவர் சென்ற 21ஆம் தேதி பள்ளியில் நடைபெற்ற தேர்வில் காப்பி அடித்து ஆசிரியையிடம் பிடிபட்டதாக சொல்லப்படுகின்றது. அதற்காக ஆசிரியை திட்டியதால் மனம் உடைந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

15 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நபர்….. மடக்கி பிடித்த அதிகாரிகள்…. விமான நிலையத்தில் பரபரப்பு….!!!

கடந்த 15 ஆண்டுகளாக போலீசாரால் தேடப்பட்டு வந்த நபர் சென்னை விமான நிலையத்தில் சிக்கினார். சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு கத்தாரில் இருந்து வந்த பயணிகளின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில் திருச்சியை சேர்ந்த ராமலிங்கம்(42) என்பவர் நைஜீரியா நாட்டிலிருந்து கத்தார் வழியாக சென்னைக்கு வந்துள்ளார். இதனை அடுத்து அவரது பாஸ்போர்ட்டை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது ராமலிங்கம் கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி அனைத்து மகளிர் போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலி ஆவணம் மூலம்….. ரூபாய் 20 லட்சம் மோசடி செய்த தொழிலதிபர்….. போலீஸ் அதிரடி….!!

போலி ஆவணம் மூலம் நிலத்தை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் ஜி.கே.எம் காலணியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் டீத்தூள் வாங்கி விற்கும் குடோன் வைத்துள்ளார். இவருக்கு சரவணன் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் சுரேஷ் சரவணனுடன் இணைந்து கிருஷ்ணகிரியை சேர்ந்த தொழிலதிபரான குரு தண்டபாணி(40) என்பவர் மூலமாக சென்னை மாவட்டத்தில் உள்ள திரு.வி.க நகரில் இருக்கும் காலி இடத்தை வாங்குவதற்காக ரூ.91 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடிபோதையில் வந்த தாயின் 2-வது கணவர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி….!!

தாயின் 2-வது கணவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கே.கே நகர் பகுதியில் 50 வயது பெண் தனது 13 வயது மகளுடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பெண்ணிற்கும், ஷேர் ஆட்டோ ஓட்டுநரான முருகன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் கணவன் மனைவி போல […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீரென உடைந்த அவசர வழி கதவு….. பள்ளி வேனிலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த மாணவி….. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள முடிச்சூர் சாலையில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் காலை வழக்கம் போல பள்ளி வேன் தாம்பரம் பகுதியில் இருந்து மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளியை நோக்கி வந்து கொண்டிருந்தது. இதில் ஏழாம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவி ரியோனா உள்பட 31 பேர் பயணித்துள்ளனர். இந்நிலையில் பள்ளி அருகே இருக்கும் சாலையில் வேகத்தடை மீது ஏறி இறங்கிய போது எதிர்பாராதவிதமாக பின்புறம் பக்கவாட்டில் இருக்கும் அவசர வழி கதவு […]

Categories
மாநில செய்திகள்

சென்னைக்கு புது ஆபத்து…. 5 வருஷத்தில் 29 சதவீத பகுதி வெள்ளத்தால் பாதிப்படையுமா?…. எச்சரிக்கை தகவல்….!!!!!

வட கிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக 20 கோடி ரூபாய் நிதிஒதுக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பெங்களூருவில் ஏற்பட்ட வரலாறுகாணாத வெள்ளத்தை அடுத்து தமிழகம் முன்கூட்டியே தயாராக இருக்கவேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். பேரிடர்களை எதிர்கொள்ளத் தயாராக வேண்டியது ஒருபுறம் இருந்தாலும், அதை தவிர்க்க காலநிலை மாற்றத்தையும் அதன் தீவிரத்தையும் உலகநாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே சூழலியல் ஆர்வலர்களின் நீண்டகால எதிர்பார்ப்பு ஆகும். இந்நிலையில் தான் சென்னைக்கான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷால் மீது லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு… இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைப்பு… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!!!!

நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்கரி நிறுவனத்தின் பட தயாரிப்பிற்காக பைனான்சியர் அன்புச் செழியன் இடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்த நிலையில் இந்த கடனை அடைத்த லைக்கா சினிமா நிறுவனம் பணத்தை திருப்பி செலுத்தும் வரை விஷால் பட நிறுவனம் தயாரிக்கும் அனைத்து படங்களிலும் உரிமையையும் லைக்கா நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என விஷாலுடன் ஒப்பந்தம் செய்திருந்தது. கடனை செலுத்தாமலேயே வீரமே வாகை சூடும் எனும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பட்டாக்கத்தியை ரயில் நடைமேடையில் உரசியபடி சென்ற கல்லூரி மாணவர்கள்”…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!!!!

ரயிலில் படியில் தொங்கியபடி நடைமேடையில் கத்தியை உரசிய படி சென்ற கல்லூரி மாணவர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் நோக்கி செல்லும் மின்சார ரயிலில் சில கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் மேற்கொண்டார்கள். மேலும் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவர்களில் ஒருவர் கையில் இருந்த பட்டா கத்தியை ரயில் பெட்டியில் தட்டியதுடன் நடைமேடையில் உரசியபடி பயணம் மேற்கொண்டார். இதனை நடைமேடையில் நின்ற பயணிகளில் ஒருவர் வீடியோ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“புற்றுநோயால் பாதித்த குழந்தைகளை முழுமையாக மீட்கலாம்”…. குழந்தைகள் நல டாக்டர் அறிவுறுத்தல்….!!!!

புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை முழுமையாக மீட்டெடுக்கலாம் என எழும்பூர் அரசு குழந்தைகள் நல டாக்டர் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள எலும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அரிமா சங்கத்துடன் இணைந்து புற்றுநோயாளிகளுக்கான ரோஜா தினம் நேற்று கொண்டாட்டப்பட்டது. இதில் குழந்தைகள் ரத்த மற்றும் புற்றுநோய் பிரிவுத் துறை தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு கூறியதாவது, கொரோனா காலத்திற்குப் பிறகு குழந்தைகளை தாக்கும் புற்று நோய் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்த நிலையில் தமிழகத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சரமாரியாக தாக்கிய மாணவர்கள்…. ஓட்டுநர் மற்றும் கண்டக்டர்களின் போராட்டம்…. பாதிக்கப்பட்ட பொதுமக்கள்….!!!

மாணவர்கள் தாக்குதலை கண்டித்து பேருந்து ஓட்டுநர்களும், கண்டக்டர்களும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஹைகோர்ட்டில் இருந்து எண்ணூர் நோக்கி சென்ற மாநகர பேருந்தில் டேவிட் என்பவர் கண்டக்டராக பணியில் இருந்துள்ளார். இந்த பேருந்து காமராஜர் நகர் அருகே சென்றபோது பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததால் டேவிட் அவர்களை கண்டித்துள்ளார். மேலும் பேருந்தின் உள்ளே வருமாறு டேவிட் அழைத்தும் மாணவர்கள் அதனை கண்டு கொள்ளவில்லை. இதனை பார்த்த ஓட்டுநர் சாலை ஓரமாக பெருந்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வலியில் அலறி துடித்த மூதாட்டி….. பேரனின் கொடூரமான செயல்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!

பணம் தொடர்பான பிரச்சனையில் பேரன் தனது பாட்டியை சுத்தியலால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகர் 2-வது தெருவில் விசாலாட்சி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டு வேலைகள் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு அமுதா என்ற மகளும், சதீஷ் என்ற பேரனும் இருக்கின்றனர் இந்நிலையில். அமுதாவுக்கு புதிய வீடு கட்டுவதற்காக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விசாலாட்சி 2 லட்ச ரூபாயை கடனாக கொடுத்துள்ளார். அதில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தவறுதலாக தண்டவாளத்தில் குதித்த நபர்….. 6 கி.மீ தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்ட உடல்….. பரபரப்பு சம்பவம்….!!!

ரயில் இன்ஜினில் சிக்கி பலியான நபரின் உடல் 6 கிலோமீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் பாட்னா வரை இயக்கப்படுகிறது. நேற்று காலை சென்னையை கடந்து கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கவரைப்பேட்டை ரயில் நிலையத்தை கடக்கும் போது 50 வயது மதிக்கத்தக்க நபர் தண்டவாளத்தில் ஓரமாக நடந்து சென்றதை பார்த்த இன்ஜின் ஓட்டுநர் ஹாரன் அடித்துள்ளார். இதனால் பதற்றம் அடைந்த […]

Categories
மாநில செய்திகள்

மெட்ரோ இல்லாத இடங்களே இல்லை… “கனெக்ட் ஆகும் கிளாம்பாக்கம் பரந்தூர்”…CMRL ன் சூப்பர் பிளான்…!!!!!!

தலைநகர் சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் அடுத்தடுத்த கட்டங்களை தாண்டி வருகின்றது. மெட்ரோ ரயில் இல்லாத இடங்களை இல்லை எனக் கூறும் அளவிற்கு புதிது புதிதாக திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதன் சமீபத்திய ஹைலைட் பரந்தூர் விமான நிலையமும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையமும் ஆகும். இவை இரண்டும் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் சென்னையில் எங்கிருந்தாலும் சொகுசான மற்றும் விரிவான பயணத்தை மேற்கொள்ள முடிகிறது. மேலும் இதற்கான முன்னெடுப்புகள் தொடங்கிவிட்டது சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் […]

Categories
தேசிய செய்திகள்

ஓடும் ரயிலில் ஏறி தவறி விழுந்த பெண்… rpf காவலரின் துரித செயல்… குவிந்து வரும் பாராட்டுக்கள்…!!!!!

ஓடும் ரயிலில் ஏறி தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய காவலருக்கு பெரும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில் சென்னையில் இருந்து குருவாயூர் செல்லக்கூடிய ரயில் நிலையத்திற்கு ரயில் வந்து நின்றுள்ளது. மீண்டும் ரயில் பிளாட்பார்ம் 4 லிருந்து புறப்பட்ட பொழுது கடைசி நேரத்தில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஓடும் ரயிலில் ஏற முயற்சி செய்துள்ளார். படியில் ஏறியவுடன் அவர் பின்பக்கமாக சாய்ந்து விழுந்து ரயிலுக்கும் தண்டவாளத்திற்கும் உள்ள இடைவெளியில் சிக்க […]

Categories
மாநில செய்திகள்

என்னப்பா இவ்ளோ காஸ்லியா!….. சென்னையில் உயர்ந்த வீட்டு வாடகை….. அதிர்ச்சியில் மக்கள்….!!!

சென்னை, பெங்களூர் உள்ளிட்ட 7 நகரங்களில் சொகுசு வீடுகளுக்கான வாடகை தொகை கணிசமாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரியல் எஸ்டேட் கன்சல்ட்டண்ட் நிறுவனமான அனராக் வெளியிட்டுள்ள தகவலின் படி, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, டெல்லி, கொல்கத்தா, புனே நகரங்களில் சொகுசு வீடுகளுக்கான வாடகை தொகை இரண்டு ஆண்டுகளில் உயர்ந்துள்ளது. அதிலும் மும்பையில் வீட்டு வாடகை அதிகபட்சமாக உயர்ந்துள்ளது. அதன்படி மும்பையில் வொர்லி பகுதியில் சோசியல் வீடுகளுக்கான வாடகத்தொகை இரண்டு ஆண்டுகளில் ரூ.2 லட்சத்திலிருந்து 18% […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலம்…. போலி ஆவணம் மூலம் மோசடி செய்த தம்பதி கைது….. பரபரப்பு சம்பவம்….!!!

போலியான ஆவணத்தை தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட தம்பதியை  போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலப்பாக்கம் பகுதியில் ஜீவானந்தம்(53)- நிர்மலா தேவி(53) தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த 2008-ஆம் ஆண்டு இந்த தம்பதியினர் பூந்தமல்லியைச் சேர்ந்த பத்மாவதி என்பவரிடம் பரணி புத்தூர் பகுதியில் இருக்கும் 80 லட்ச ரூபாய் மதிப்புள்ள 55 சென்ட் நிலத்தை வாங்கியுள்ளனர். அந்த இடத்தை காரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர் பத்மாவதிக்கு விற்பனை செய்துள்ளார். இந்நிலையில் மகாலிங்கத்தின் மகனான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சுற்றி வளைத்த மர்ம கும்பல்…. பிரபல ரவுடி படுகொலை…. பரபரப்பு சம்பவம்….!!!

முன்விரோதம் காரணமாக பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் வ.உ.சி நகர் 7-வது தெருவில் பிரபல ரவுடியான ஜாகிர் உசேன்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது எண்ணூர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, அடிதடி உள்பட ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. தற்போது ஜாகிர் உசேன் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். நேற்று முன்தினம் காமராஜர் நகர் 7-வது தெருவில் இருக்கும் ரயில்வே தண்டவாளம் அருகே நின்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு நாளில்….. பிரபல ரவுடி எடுத்த விபரீத முடிவு….. பெரும் சோகம்….!!!

மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் பிரபல ரவுடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வரதராஜபேட்டை பகுதியில் பிரபல ரவுடியான பிரசாந்த்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. கடந்த 19-ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் பிரசாந்த் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதனை அடுத்து பிரசாந்தின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர்கள்….. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த 2 வாலிபர்களுக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி தேவி கருமாரியம்மன் கோவில் தெருவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் சிலர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் 2 வாலிபர்கள் கையில் செல்போனுடன் சந்தேகத்திற்கிடமாக வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தனர். இந்நிலையில் வீட்டிற்கு வெளியில் உள்ள குளியளறையில் யாரோ குளிப்பதை வீடியோ எடுப்பதை பார்த்ததும் பெண்கள் கூச்சலிட்டனர். இதனையடுத்து […]

Categories

Tech |