சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பங்களாதேஷை சேர்ந்த முதியவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் தமிழகத்திற்கு வருகை தந்தார். இதனை தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டை தனியார் மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். […]
