நேற்று முன்தினம் தலைமை செயலகத்தில் சென்னை தினத்தை முன்னிட்டு மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் நடைபெற்ற கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நகர்ப்புற வளர்ச்சித் அமைச்சர் கே.என்.நேரு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் கலந்துகொண்டனர். இதையடுத்து அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இந்நிலையில் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் மேயரை பதில்சொல்ல அறிவுறுத்தியுள்ளார். […]
