ராமநாதபுரம் மாவட்டம் சென்னை-பெருநாழி இடையே அரசு விரைவு பேருந்து இயக்க வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் கடலாடி பகுதிகளில் சுமார் 60 கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் பலரும் சென்னை, கோவை போன்ற பல்வேறு பகுதிகளில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் வெளியூரில் வேலை பார்பவர்கள் அடிக்கடி சொந்த ஊருக்கு வந்து செல்ல நேரடி பஸ் வசதி இல்லாததால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து கமுதியில் இருந்து […]
