வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சென்னை தலைமைச்செயலகத்தில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ்கள் உடைந்து சேதம் அடைந்துள்ளது. கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் சென்னையில் கடந்த இரண்டு தினங்களாக வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கின்றது. இதனால் சென்னையில் உள்ளவர்கள் மிகவும் சிரமப்பட்டு வெளியே சென்று வருகிறார்கள். இந்நிலையில் தலைமைச் செயலகத்தின் நாலாவது நுழைவாயில் பதிக்கப்பட்டுள்ள 15-க்கும் அதிகமான டைல்ஸ்கள் நேற்று பிற்பகல் சட சட என்ற சத்தத்துடன் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அவை தரையிலிருந்து பெயர்ந்து மேலே […]
