சென்னையில் அதிகபட்சமாக ஆவடியில் 20 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகின்றது. சென்னையை பொருத்தவரை புறநகர் பகுதிகளான ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், திருமுல்லைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக ஆவடியில் மட்டும் 20 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதைத்தவிர சோழவரம்-15 […]
