ஹோட்டல் சாம்பாரில் செத்த எலி கிடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்தவர் திவ்யா. இவருடைய தம்பி கார்த்திகேயன் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திவ்யா சம்பவத்தன்று சாப்பிடுவதற்காக அரசு மருத்துவமனை எதிரே உள்ள தனியார் ஓட்டலில் ஆப்பம் மற்றும் சாம்பார் பார்சல் வாங்கி உள்ளார். பின்னர் அதை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து இருவரும் சாப்பிட தொடங்கிய போது சாம்பாரில் கருப்பு நிறத்தில் ஏதோ […]
