அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகை எப்போது கிடைக்கும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசு, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கி வந்தது. இந்த கொரோனா நெருக்கடி காலத்தில் அந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. பின்னர் கடந்த அக்டோபர் மாதம் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதன்படி அகவிலைப்படி 17 விழுக்காட்டில் இருந்து 31 விழுக்காடாக உயர்ந்துவிட்டது. எனினும், அகவிலைப்படி நிலுவைத் தொகை அரசு ஊழியர்களுக்கு இன்னும் வழங்கப்படாமலேயே உள்ளது. […]
