வேளாண் சட்டங்களால் விவசாயிகள் தங்களது சொந்த நிலங்களிலேயே கூலித் தொழிலாளர்களாக மாற்றப்படுவார்கள் எனவும், டெல்லி வன்முறைக்கு பாஜக தான் காரணம் என்றும் திரு அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். உத்திரபிரதேச மாநிலம் மீரட்டில் நடைபெற்ற கிசான் மகா பஞ்சாயத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு உரையாற்றினார். டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் அவர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்கள் […]
