செங்கல் தொழிற்சாலையின் உரிமையாளரை கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், குன்னவாக்கம் ஊராட்சி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மனோகர்(47). இவர் குன்னவாக்கம் ஏரிக்கரை அருகில் சிமெண்ட் செங்கல் தயாரிக்கும் தொழிற்சாலை சொந்தமாக நடத்தி வந்துள்ளார். இவருக்கு கல்யாணமாகி இரண்டு மகன்கள் உள்ளார்கள். இவர் கடந்த 6-ம் தேதி இரவு தொழிற்சாலையில் தங்கியிருக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டுக்கு நீண்ட நேரமாகி வரவில்லை என்று அவரது தந்தை முத்து […]
