சிறுவன் ஒருவர் கிணற்றில் நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சிங்கப்பெருமாள்கோவில் பகுதியில் வசிப்பவர் மணிவண்ணன். இவருடைய மகன் 12 வயதான தமிழ்காவியன். இவர் சம்பவத்தன்று மாலையில் செங்குன்றம் பக்கத்திலுள்ள தோட்டத்திற்கு நண்பர்களுடன் சென்றுள்ளார். இதையடுத்து அங்குள்ள ஒரு விவசாய கிணற்றில் நண்பர்களுடன் சேர்ந்து குளித்துக் கொண்டிருந்திருக்கிறார். இவர்கள் அனைவரும் நீரில் நீச்சல் அடித்து விளையாடி உள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக, தமிழ்க்காவியன் திடீரென நீரில் மூழ்கியதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக […]
