எகிப்தில் கடலில் குளித்துக் கொண்டிருந்த இரண்டு பெண்களை சுறா தாக்கி உயிரிழந்துள்ளனர். எகிப்து நாட்டில் ஹுர்ஹ்டா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள செங்கடலில் ஷஹல் ஹஹ்ரீஸ் எனும் இடத்தில் விடுமுறை நாளான நேற்று நூற்றுக்கணக்கானோர் குளித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது 600 மீட்டர் தொலைவில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்த இரண்டு பெண்களை சுறா தாக்கியது. இந்த தாக்குதலில் ஆஸ்திரேலியா மற்றும் ருமேனியா நாட்டை சேர்ந்த இரண்டு பெண்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
