அமெரிக்க நாட்டில் உள்ள வாஷிங்டனில் பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆய்வாளர் ஹென்றி டேனியல் தலைமையிலான குழு உருவாக்கிய சூயிங் கம் தொடர்பான ஆய்வறிக்கையானது ஒரு இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆய்வாளர் ஹென்றி கூறியதாவது “முழுமையாக தடுப்பூசி போட்டு கொண்டவர்களும் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படலாம். இதனையடுத்து அவர்கள் கொரோனா தொற்றை மற்றவர்களுக்கு பரப்பும் நிலையும் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் சூயிங் கம் உருவாக்கி இருக்கிறோம். கொரோனா தொற்று பொதுவாக மனிதர்களின் உமிழ்நீர் சுரப்பிகளில் பிரதி எடுத்து பெருகுகிறது. […]
