ஜார்க்கண்ட் மாநிலத்தில் சூனியக்காரி என்று கூறி மூதாட்டியை அடித்து தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம், சிம்டெகா நகரின் தீத்தைடேஞ்சர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ஜாரியோ தேவி. இவருக்கு வயது 60. இவர் கடந்த புதன்கிழமை புளோரன்ஸ் டங்டங் என்பவரின் மனைவியின் இறுதி சடங்கு விருந்தில் கலந்துகொண்டார். விருந்து முடிந்தவுடன், ஜாரியோவை சூனியக்காரி என கூறியதுடன், அவரது மனைவி மரணத்திற்கு ஜாரியோவே காரணம் என புளோரன்ஸ் கூறியுள்ளார். […]
