மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் அகோர மூர்த்திக்கு நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவெண்காட்டில் சிறப்பு வாய்ந்த சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தனி சன்னதியில் சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான அகோரமுகம் அகோரமூர்த்தி சுவாமியாக அருள்பாலித்து வருகிறார். அஷ்ட பைரவர்கள் இவரின் திருமேனி அடிப்பகுதியில் காட்சியளிப்பது விசேஷமாக கருதப்படுகிறது. இவரை வழிபட்டால் செல்வம் செழிப்பதோடு, எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்குவதாக ஐதீகம். அகோர மூர்த்தி […]
