ரஷ்யாவில் ஹெலிகாப்டர் ஒன்று திடீரென விபத்துக்குள்ளாகி ஏரியில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் mi-8 என்னும் ஹெலிகாப்டர் ஒன்று மொத்தமாக 16 பேரை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில் இந்த ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளாகி ரஷ்யாவிலுள்ள ஹம்சட்கா என்னும் பகுதியில் அமைந்துள்ள குரில் ஏரியில் விழுந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இதன் விளைவாக மீட்புக்குழுவினர்கள் விபத்தில் சிக்கிய சுமார் 8 பேரை மீட்டுள்ளார்கள். […]
