பாலத்தின் ஓரத்தில் நின்று புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதை 14 கொண்டை ஊசி வளைவுகளையும், சிறிய மறைமுக விளைவுகளையும் கொண்டுள்ளது. தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் குன்னூர் பகுதியில் இருக்கும் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் பாலத்தின் ஓரத்தில் நின்று அருவியின் பின்னணியில் புகைப்படம் எடுக்கின்றனர். இவ்வாறு ஆபத்தை உணராமல் பாலத்தின் […]
