ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்ததையடுத்து ஊட்டியில் தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து கொரோன வைரஸ் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்துள்ள நிலையில் இன்று உதகை அரசு தாவரவியல் பூங்கா மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் திறக்கப்பட்டன. உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கைகளில் கிருமி […]
