பார்வையற்றவருக்காக பேருந்தை நிறுத்தி உதவிய பெண்ணின் மனிதாபிமான செயலைப் பாராட்டி அவர் பணிபுரியும் நிறுவனத்தின் தலைவர் வீடு ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். கேரள மாநிலத்தில் பேருந்தை பிடிக்க பார்வையற்றவர் சென்றுள்ளார். அச்சமயத்தில் அங்கிருந்த பெண் புறப்பட தயாராக இருந்த பேருந்தை நோக்கி ஓடிச்சென்று பேருந்தை நிறுத்தக் கோரி பேருந்து நடத்துனரிடம் கூறிவிட்டு பார்வையற்ற நபர் பேருந்தில் ஏறுவதற்கு உதவியுள்ளார். இத்தகைய காட்சியானது சென்ற வாரத்தில் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகியது. அதனைத்தொடர்ந்து அப்பெண்ணிற்கு பெரும் பாராட்டுகள் குவிகின்றன. […]
