ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி பகுதியில் சுதந்திர தின விழா சிறப்பாக நடந்தது. இந்தியாவில் நேற்று 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் மாவட்ட திமுக பொறுப்பாளரும் எம்.எல்.ஏ-வுமான தேவராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நாட்டறம்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பலர் கலந்துகொண்டார்கள். நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றினார். பின் […]
