பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மையத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகில் புவனகிரி சேந்திரக்கிள்ளை மணிக்கொல்லை கிராமத்தில் வசித்து வருபவர் முனிசாமி. இவருடைய மகன் 28 வயதுடைய பெரியசாமி என்பவர் கடலூர் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தற்சமயம் சிதம்பரம் தில்லை நகரில் இருக்கின்ற தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் கடந்த 6ஆம் தேதி முதல் […]
