அனைத்து கிராமங்களிலும் சுகாதார வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஞ்சாயத்து தலைவர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் அருகே இருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை என உதவித்தொகைகள் 13 பேருக்கும் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா பெயர் மாற்றம் என 72 பேருக்கும் 2 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட […]
