தமிழகத்தில் இன்று 2,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 59,000ஐ தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் 59,377 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 2,480 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 52 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 33 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, நீலகிரி, பெரம்பலூர், திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று இல்லை என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னை – 1,493, […]
