சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே சந்தைக்கு செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதகுப்பட்டி கல்லல் பகுதியில் வியாழக்கிழமையும், சொக்கநாத புரத்தில் செவ்வாய்க்கிழமையும், பாகனேரியில் புதன்கிழமையும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைகளில் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் காய்கறிகள் வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் […]
