சீன நாடு மலேசியா, புரூணை, வியட்நாம், பிலிப்பைன்ஸ், தைவான் ஆகிய நாடுகளுடைய நீர்வழி பகுதிகளை ஆக்கிரமிக்கும் விதமாக தென்சீன கடல் பகுதி முழுவதும் தனக்கு சொந்தம் என்று கூறி வருகிறது. பிலிப்பைன் நீர்வழி பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு 240 சீன கப்பல்கள் காணப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை 270 கப்பல்களாக இருந்துள்ளது. எனினும் தென்சீன கடல் மற்றும் கிழக்குசீன கடல்பகுதியில் கடந்த சில மாதங்களாக சீன அரசானது நீர்வழி பயன்பாட்டை அதிகரித்துள்ளது. […]
