சென்னையில் சி.பி.ஐ வசமிருந்த 103 கிலோ தங்கம் மாயமான வழக்கில், 6 மாத காலத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் என சி.பி.சி.ஐ.டி டி.ஜி.பி. திரு.பிரதீப் பிலிப் தெரிவித்துள்ளார். சென்னை சவுகார்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 2012-ம் ஆண்டு தங்கத்தை முறைகேடாக விற்பனை செய்தது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான 400 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து லாக்கரில் வைத்து இருந்தனர். லாக்கரில் வைக்கப்பட்ட […]
