மகா சிவராத்திரி – வரலாறு! பிரம்மனும் அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்ட நிலையில் இரவுப்பொழுதில் அம்பிகை உமாதேவி பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். நான்க ஜாமங்களிலும் இரவு முழுவதும் அர்ச்சனை செய்தாள். பூஜையின் முடிவில் அம்பிகை பரமேஸ்வரனை வணங்கி அடியேன் தங்களைப் பூஜித்த இந்த இரவை தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே அதாவது சிவராத்திரி என்று கொண்டாடிட வேண்டும் என்று வேண்டினாள். அந்த சிவராத்திரி அன்று சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை தங்களை பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அருள வேண்டும் என்றும் உமாதேவி வேண்டிக்கொண்டாள். பரமேஸ்வரரும் அப்படியே ஆகட்டும்! […]
