உலக அமைதி வேண்டி விஸ்வநாதர் கோவிலில் சங்காபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூரில் விசாலாட்சி உடனுறை விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசி கடைசி சோம வாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் நடைபெற்றுள்ளது. இக்கோவிலில் வலம்புரி சங்குகளை வரிசையாக வைத்து ஒவ்வொரு சங்கின் மீது ஏலக்காய், பச்சைக் கற்பூரம் கலந்து காசி தீர்த்தம் ஊற்றி பூ அலங்காரம் செய்தனர். பின் தீர்த்த கலசம் வைத்து யாக குண்டம் வளர்த்து மகா கணபதி ஹோமம் […]
