Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குழந்தை இல்லாத ஏக்கம்… மனமுடைந்த பெண் எடுத்த விபரீத முடிவு…!!

குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பாச்சேத்தி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் விஜய்-பவித்ரா.  இத்தம்பதியருக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றது. குழந்தை இல்லை. இதனால் பவித்ரா  மன வேதனையில்  இருந்துள்ளார். இதைப்பார்த்த பவித்ராவின் பெற்றோர் பவித்ராவை  தங்களது உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளனர். அங்கு பவித்ரா கழிவறைக்கு செல்வதாக உறவினரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“முள்படுக்கையில் படுத்து” பக்தர்களுக்கு ஆசி வழங்கிய சாமியார்…. ஆச்சர்ய சம்பவம்…!!

சாமியார் ஒருவர் முள் படுக்கையில் படுத்துக்கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மார்கழி மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில் காலையில் சிறப்பு பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.  இந்நிலையில் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே லாடனேந்தல் முத்துமாரியம்மன் கோவிலில் வருடந்தோறும் மார்கழி, 18ல் முள்படுக்கை தவம் நடைபெறுவது வழக்கம். இந்த விழாவின் போது பெண் சாமியார் நாகராணி அம்மையார் முத்துமாரியம்மன், விநாயகரை வழிபட்டு சிறப்பு பூஜை செய்துள்ளார். பின் புண்ணிய தீர்த்தம் தெளித்து, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சவால் விட்டதால் கொலை செய்யப்பட்ட வாலிபர்… கைதான குற்றவாளிகள்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

வாலிபரை கழுத்தை அறுத்து கொலை செய்த இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் முருகன். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து திருப்பூரில் உள்ள அவரது உறவுக்காரர் சக்திவேல்  என்பவருடன் தங்கி அங்குள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பல்லடம் சாலையில் உள்ள தெற்கு பாளையம் பகுதியில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் முருகன் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம்  குறித்து  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்த போது…. திடீரென வந்த கார்…. லாரி ஓட்டுனருக்கு நேர்ந்த சோகம்…!!!

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த  லாரி ஓட்டுனர் கார் மோதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சிவகங்கை மாவட்டம் கீழ்மேல்குடி கிராமத்தை சேர்ந்தவர் லாரி டிரைவர் விவேக்( வயது 48). அவர் ஓசூருக்கு சென்றிருந்த போது  ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் குமுதேப்பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக விவேக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த ஓசூர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“லவ் பண்ணும்போது சாதி தெரியலை” இப்போ அது தான் பிரச்சினை…. பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…!!

காதல் திருமணம் செய்த 45 நாட்களில் இளம்பெண் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீரணிப்பட்டியை சேர்ந்த இளம்பெண் கற்பகம். இவர் தன்னுடன் கல்லூரியில் படித்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியனை காதலித்து வந்துள்ளார். வெவ்வேறு சமூகங்களை சேர்ந்த இருவரும் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் எனது மகளை காணவில்லை என்று கற்பகத்தின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பச்சை குழந்தை என்று பார்க்காமல்…. மருமகளை பழிவாங்க…. மாமியார் செய்த காரியம்….!!

சிவகங்கை மாவட்டத்தில் தனது சொந்த பேரனையே  பாட்டி கடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடியை சேர்ந்தவர்கள் அருண் ஆரோக்கியம் -தைநீஸ்வரி. இருவரும்  காதலித்து வந்த போது அருண் ஆரோக்கியத்தின் குடும்பத்தினர் இவர்களின் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில் தனிக்குடித்தனம் சென்றனர் . குழந்தை பிறந்தால் குடும்பத்தினர் சமரசம் ஆகி விடுவார்கள் என இருவரும் எதிர்பார்த்துள்ளனர். இதனிடனையே அவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. […]

Categories
அரசியல்

BREAKING : சிவகங்கை ஊராட்சி தலைவர் தேர்தல் – அதிமுக வெற்றி

இன்று நடைபெற்ற சிவகங்கை ஊராட்சிமன்ற தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது  சிவகங்கை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் நடைபெற்று தற்போது யார் வெற்றி பெற்றார் என்பது தெரியவந்துள்ளது . நான்கு முறை ஒத்திவைக்கப்பட்ட இந்தத் தேர்தல் இன்று நடைபெற்றுள்ளது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. 16 மாவட்ட ஊராட்சி வார்டில்  8 இடங்களில் திமுகவும் 8 இடங்களில் அதிமுகவும் போட்டியிட்டன. 11 மாதங்களாக தலைவர் துணைத் தலைவர் தேர்வு செய்யப்படாததால் மாவட்ட கவுன்சிலர்கள், […]

Categories
அரசியல்

BREAKING : சிவகங்கை ஊராட்சி தலைவர் தேர்தல் நிறைவு…!!

4 முறை ஒத்திவைக்கப்பட்ட சிவகங்கை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் இன்று நடைபெற்று முடிந்துள்ளது  சிவகங்கை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. நான்கு முறை ஒத்திவைக்கப்பட்ட இந்தத் தேர்தல் இன்று நடைபெற்றுள்ளது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. 16 மாவட்ட ஊராட்சி வார்டில்  8 இடங்களில் திமுகவும் 8 இடங்களில் அதிமுகவும் போட்டியிட்டன. 11 மாதங்களாக தலைவர் துணைத் தலைவர் தேர்வு செய்யப்படாததால் மாவட்ட கவுன்சிலர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வெளிநாட்டில் அண்ணன்…. வீட்டில் அண்ணியுடன் தகாத உறவு…. புது மனைவி எடுத்த திடீர் முடிவு…!!

பெண் ஒருவர் தனது கணவரின் தகாத உறவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிகள் கௌசல்யா(19) – பாக்யராஜ்(32). இவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று பாக்யராஜ் வெளியில் சென்றிருந்த போது கௌசல்யா தூக்கில் தொங்கி பிணமாக கிடந்துள்ளார். மேலும் அவரின் கை மற்றும் கால்களில் ரத்த காயங்கள் இருந்துள்ளன. வீட்டின் சுவர்களிலும் ரத்தக் கறைகள் படிந்துள்ளன. இதனால் கௌசல்யாவின் இறப்பில் பல்வேறு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி… லாரிக்கும்,காருக்கும் இடையில் சிக்கிய வாகனம்… உயிர் தப்பினாரா? இல்லையா?…!!!

சிவகங்கையில் லாரி மற்றும் காருக்கு இடையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த ஒரு நபர் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். சிவகங்கையில் வேல் யாத்திரை காரணமாக பல்வேறு பகுதிகள் தடை செய்யப்பட்டுள்ளன. அதனால் அப்பகுதியில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஒரே பாதையில் செல்வதற்கு போலீசார் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் சாலை ஓரமாக கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதன் வழியாக நேற்று மதியம் ஒரு மணிக்கு தேவ கோட்டையை சேர்ந்த சூசை என்ற தொழிலாளி மோட்டார் சைக்கிளில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய வாத்து…. காப்பாற்றிய ஆசிரியர்…. தன் உயிரை மாய்த்த சோகம்….!!

வாத்தை காப்பாற்ற முயன்ற பள்ளி ஆசிரியர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் பெஞ்சமின் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் புலியடி தம்மம் என்னும் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த போது அங்கு கிணற்றில் விழுந்த வாத்தை காப்பாற்ற முயன்று உள்ளார். பின்பு வெற்றிகரமாக வாத்தை காப்பாற்றிய பெஞ்சமின் கிணற்றிலிருந்து வெளியே வர முயன்றபோது எதிர்பாராதவிதமாக கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்தார். பின்பு அங்கு வந்த போலீசார் பெஞ்சமின் உடலை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கிணற்றில் விழுந்த வாத்து… காப்பாற்ற சென்ற ஆசிரியர்… விபரீதத்தில் முடிந்த முயற்சி…!!!

சிவகங்கை மாவட்டத்தில் கிணற்றில் விழுந்த வாத்து ஒன்றை காப்பாற்ற முயற்சி செய்த பள்ளி ஆசிரியர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மறக்காத்துர் அரசு பள்ளியில் பெஞ்சமின் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அவர் புலியடி தம்மம் என்ற பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு கிணற்றில் விழுந்த வாத்தை கயிற்றை தனது வயிற்றில் கட்டி கொண்டு காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். அதன் பிறகு அவர் வாத்தை காப்பாற்றினார். […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

13 மாவட்டங்களில்…. ”இடியுடன் கூடிய கனமழை”…. அலார்ட் கொடுத்த ஆய்வு மையம் …!!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பிருக்கும் நிலையில் 13 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. வரும் 28-ம் தேதியை ஒட்டி வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப் பட்டு இருக்கும் நிலையில் தற்போது நிலவி வரக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 13 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 26, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மத்திய பல்கலை., பேராசிரியர் தலைமையில் கீழடியில் அகழாய்வு..!!

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் தலைமையில் கீழடியில் அகழாய்வு நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, மணலூர் ஆகிய பகுதிகளில் ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. கொரோனா  ஊரடங்காள் நிறுத்தப்பட்ட அகலாய்வு பணிகள் ஜூன் மாதம் முதல் மீண்டும் தொடங்கியது. இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவுப்படி திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் திரு பெருமாள் தலைமையில் குழுவொன்று கீழடிக்கு ஆய்வுக்காக சென்றுள்ளது. கீழடி அகழாய்வுகாக தோண்டப்பட்ட குழியில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கத்தியால் குத்தி மெக்கானிக் கொலை தப்பியோடியவர்களை பிடிக்க போலீஸ் தீவிரம்..!!

காரைக்குடியில் இரு சக்கர வாகனங்கள் ஒன்றையொன்று முந்திச் செல்ல முற்பட்ட போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரம் பகுதியில் 2 இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் இடையே போட்டி ஏற்பட்டபோது. அப்போது ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முற்பட்டனர். இதனால் வாகனத்தில் சென்றவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பை சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள், இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொருவரை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நான் இருக்கமாட்டேன்… “ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு”… மரத்தில் சடலமாக தொங்கிய ஆசிரியை… சோக சம்பவம்..!!

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போட்டு விட்டு அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் காரைக்குடியை சேர்ந்த தம்பதியினர் காண்டீபன் புவனேஸ்வரி. காண்டீபன் தீயணைப்புத் துறையில் பணிபுரிந்து வரும் நிலையில் புவனேஸ்வரி அரசு பள்ளியில் ஆசிரியராகவும் சொந்தமாக நடனப்பள்ளி நடத்துபவராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் புவனேஸ்வரி இதுவரை ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் எனது நன்றி.இனிமேலும் இனி நான் இருக்க போவதில்லை என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ரூ. 2 கோடி சொத்துக்காக சித்தப்பா தலையை வெட்டிய மகன்கள்…!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே இரண்டு கோடி ரூபாய் சொத்து பிரச்சினையில் சித்தப்பாவின் தலையை வெட்டி தலையுடன் காவல் நிலையத்தில் சகோதரர்கள் சரண் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருகே யூசுப் ரகுமான் என்பவர் இறைச்சி கடை வைத்துள்ளார். இவருக்கும் இவரது அண்ணன் சகுபர் அலி க்கும் இடையே கோட்டைப்பட்டினத்தில் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் இரு குடும்பத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய மேற்கூரை ஓடுகள் கண்டெடுப்பு …!!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்றுவரும் 6_ ம் கட்டம் அகழ் ஆய்வு பணிகளில் தொன்மைக்கால தமிழர்கள் பயன்படுத்திய மேற் கூரை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கீழடியில் கடந்த மே மாதம் சிறிய விலைகளின் கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இவ்விடம் தொன்மைக்கால தமிழரின் தொழில் நகரமாக இருந்திருக்க வாய்ப்புண்டு என்ற சந்தேகம் எழுந்தது. அதை தொடர்ந்து அங்கு மேலும் நான்கு குழிகள் தோண்டப்பட்டத்தில், மேற் கூரை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. நான்கு குழிகளிலும் ஒரே அளவு ஆழத்தில் சரிந்த நிலையில் மேற் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஒருபக்கம் கடன் கொடுத்தவர்கள்… மறுபுறம் மாமியார் தொந்தரவு… பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் தற்கொலை..!!

தேவகோட்டை அருகே 3 பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள சிதம்பரநாதபுரத்தில் ராமதாஸ் என்பவர் வளர்ப்பு தாய் வசந்தா வீட்டில் 2 மகன்கள், ஒரு மகள் மற்றும் மனைவி பிரியதர்ஷினியுடன் வாழ்ந்து வந்தார். இந்தநிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக உடல்நலம் பாதிக்கப்பட்டு ராமதாஸ்இறந்து போனார். கணவர் இறந்த பின்னரும் பிரியதர்ஷினி தன்னுடைய 3 பிள்ளைகளுடன்  அதே வீட்டில் வசித்துவந்தார். இதற்கிடையே […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பெற்ற பிள்ளைகளுக்கு காபியில் விஷம்… தாயும் குடித்துவிட்டு தற்கொலை…!!

3 குழந்தைகளுக்கு காபியில் விஷம் கலந்து கொடுத்து விட்டு தாயும் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சிதம்பரநாதபுரம் பகுதியை சேர்ந்த ராமதாஸ் என்பவர் கடந்த 4 மாதத்திற்கு முன்பு மாரடைப்பால் இறந்துவிட்டார். இவருடைய மனைவி பிரியதர்சினி, இவருக்கு வயது 36. மேலும் ராமதாஸ்-பிரியதர்ஷினி தம்பதியினருக்கு, 16 வயதுள்ள பர்வதவர்த்தினி என்ற மகளும், நீலகண்டன் (15), மற்றும் ஜெய் ஹரிகிருஷ்ணன்(11) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். ராமதாசின் பெரியம்மாள் வசந்தி(75) […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பசுமாட்டை காப்பாற்ற முயற்சித்த பெண் மின்சாரம் தாக்கி பலி…. உடன் சென்ற நாயின் பாசப் போராட்டம்….!!

பசு மாடுகளை காப்பாற்ற சென்ற பெண்ணின் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் அவரின் உடல் மீது உருண்டு புரண்டு நாயொன்று பாசப் போராட்டம் நடத்திய சம்பவம் காண்போரை கண் கலங்க செய்துள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரம் பகுதியை சேர்ந்தவர் ராசு. இவருடைய மனைவி வேட்டைக்காள் (வயது 70). ராசுவின் மனைவி 3 பசுமாடுகளையும் ஒரு நாயையும் வளர்த்து வந்தார். பசுமாடுகளை தினந்தோறும் வயலில் மேய்ச்சலுக்காக விடுவார். அவர் வளர்த்து வந்த நாய்க்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கல்குவாரியில் மூழ்கி அண்ணன், தங்கை பலி… சோகத்தில் குடும்பத்தினர்..!!

சிவகங்கை மாவட்டம் கல்குவாரியில் குளிக்கச் சென்ற இடத்தில் அண்ணன் மற்றும் தங்கை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே இருக்கின்ற அரளிப்பட்டி முத்தரையர் காலணியில் பாண்டி முருகன் (35) என்பவர் வசித்துவருகிறார். இவர் மலேசியாவில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். இவரது மனைவி இந்திரா (31). இவர்களது மகன் சின்னப்பாண்டி என்ற 11 வயது சிறுவன் ஆறாம் வகுப்பும், மகள் சுபிக்ஷா என்ற 8 வயது சிறுமி மூன்றாம் வகுப்பும் அங்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிர்ஷ்டம் பிறக்கும்… சிட்டுக்குருவிக்காக இருட்டில் வாழும் கிராமத்தினர்..!!

சிட்டுக்குருவிக்காக மின் இணைப்பு பெட்டியில், கட்டப்பட்டிருந்த கூட்டை களைக்காமல், ஒரு கிராமம் இருளில் வாழ்ந்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் அருகே இருக்கிறது பொத்தகுடி என்ற கிராமம்.. இந்த கிராமத்தின் மின்கம்பத்தில் தெருவிளக்கு இணைப்பு பெட்டியில் குருவிக்கூடு கட்டி, முட்டை போட்டு  அடைகாத்து வந்தது. இதனை கண்ட கிராமத்து இளைஞர்கள், அதனை பாதுகாக்க தொடங்கினர். தெருவிளக்குகள் எரிவதற்கு மொத்த கண்ட்ரோல் ஸ்விட்ச்சும், குருவி கூடு கட்டியிருக்கும்  மின் இணைப்பு பெட்டியிலிருப்பதால்,  ஊர்மக்களால் சுவிட்சை ஆன் பண்ண முடியவில்லை. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகாலையில் பயங்கரம்..! இராணுவ வீரர் வீட்டுக்குள் புகுந்து… தாய் மற்றும் மனைவியை கொன்று விட்டு… நகையுடன் தப்பிய கொள்ளையர்கள்.!!

இராணுவ வீரர் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அவரின் மனைவி மற்றும் தாயை கொடூரமாக கொன்றுவிட்டு நகையை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகேயுள்ள முடுக்கூரணியை சேர்ந்தவர் இராணுவ வீரர் ஸ்டீபன். இவர் தற்போது லடாக் எல்லையில் நாட்டிற்காகக பணி புரிந்து வருகிறார். இந்த  நிலையில் இன்று அதிகாலை ஸ்டீபன் வீட்டுக்குள்  கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். பின்னர் ஸ்டீபனின் தாய் ராஜகுமாரி மற்றும் மனைவி சினேகாவை கொள்ளையர்கள் தலையணையை வைத்து அமுக்கி, கம்பியால் […]

Categories
சிவகங்கை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இராமநாதபுரம், சிவங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி …!!

கடந்த நான்கு மாதங்களாக கொரோனா கால ஊரடங்கால் பொதுமக்கள் மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். நாட்டின் பொருளாதாரம் மட்டுமல்லாமல்ல, மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. சரிந்து போன மக்களின் வாழ்க்கை தேவையை மீட்டெடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளையும்,  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக வங்கிகளில் வட்டி கட்டுவது, இஎம்ஐ செலுத்துவது, வீட்டு வாடகை, மின்கட்டணம் போன்ற அனைத்து விதமான விஷயங்களிலும் சில சலுகைகளை மத்திய மாநில அரசுகள் பிறப்பித்துள்ளது.  இந்த வரிசையில் […]

Categories
சிவகங்கை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

2 மாவட்டகளுக்கு மட்டும் அதிரடி… மகிழ்ச்சியை கொடுத்த SP உத்தரவு …!!

கொரோனா கால ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தனியார் நிறுவனங்கள் மக்களை கடனை கட்டச் சொல்லி நெருக்கடி தரக்கூடாது என ராமநாதபுரம் எஸ்பி வருண்குமார் (சிவகங்கை பொறுப்பு) உத்தரவிட்டுள்ளார். நெருக்கடி தரும் நிறுவனங்கள் குறித்து ராம்நாடு, சிவகங்கை மக்கள் 94 89 91 97 22 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். மாவட்ட எஸ்பியின் இந்த உத்தரவு ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தியாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உழவில்லா இயற்கை விவசாயத்தில் சாதித்த பெண் – எம்.ஏ.,எம்.பில். படித்த பெண் விவசாயி

நம்மாழ்வார் கூற்றுப்படி விவசாயம் செய்து வரும் எம்.ஏ., எம்.பில். பட்டதாரி பெண் அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறார் சிவகங்கை அருகே பனையூரில் நம்மாழ்வார் மூலம் ஈர்க்கப்பட்ட  பெண் விவசாயி ஜெயலக்ஷ்மி உழவில்லா இயற்கை விவசாயத்தில் சாதித்து வருகிறர். வறண்டு கிடந்த பூமியை இயற்கை விவசாயம் மூலம் பசுமையாக்கி உள்ளார் எம்.ஏ., எம்.பில். படித்து விட்டு விவசாயம் பார்த்து வரும் பெண் விவசாயி ஜெயலட்சுமி. 2 ஏக்கர் 60 செண்டில் கொய்யா, நாவல், வாழை பூந்திக்கொட்டை , நெல், […]

Categories
சிவகங்கை புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சென்னை செல்வதாக கூறி… வீட்டை விட்டு சென்றவர் குளத்தில் சடலமாக கிடந்த அதிர்ச்சி… போலீசார் விசாரணை..!!

திருமயம் உச்சிப்பாறை குளத்தில் மிதந்த ஆண் ஒருவரின்  உடலை மீட்ட போலீசார் கொலையா அல்லது தற்கொலையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உச்சிப்பாறை குளத்தில் ஆண் ஒருவரின் உட….ல் ஒன்று மிதப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் தியாகராஜன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று அந்த உடலை கைப்பற்றி திருமயம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். பின்னர் இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

Categories
மாநில செய்திகள்

சிவகங்கையில் இன்று கொரோனா பாதித்த 36 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்!

சிவகங்கையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 36 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிவகங்கையில் நேற்றைய நிலவரப்படி 110 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 58 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 51 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். மேலும் இதுவரை சிவகங்கையில் கொரோனோவால் பாதித்த ஒருவர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 36 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் […]

Categories
சிவகங்கை மாநில செய்திகள்

சிவகங்கையில் கொரோனாவுக்கு முதல் பலி – சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழப்பு!

சிவகங்கை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்துள்ளார். சிவகங்கையில் இதுவரை கொரோனா வைரஸால் 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 32 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 10 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று வரை சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா வைரஸால் ஒருவர் கூட பலியாகாத நிலையில் இன்று சிவகங்கை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்துள்ளார். சிவகங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதுகுளத்தூர் பகுதியை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உண்டியல் காணிக்கை ரூ12,71,509…. நல்ல காரியத்துக்கு USE பண்ணுங்க…. பொதுமக்கள் கோரிக்கை….!!

திருப்புவனம் அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி முடிவில் ரூபாய் 12,71,509 கணக்கிடப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதி அருகே உள்ள மடப்புரம் என்னும் கிராமத்தில் அடைக்கலம் காத்த அய்யனார் கோவிலும், பத்திரகாளி அம்மன் கோவிலும் அமைந்துள்ளது. இந்த கோவிலானது தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பிரசித்தி பெற்ற கோவிலாகும். புகழ்பெற்ற இந்த கோவிலில், ஓரிடத்தில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து உண்டியல்கள் அனைத்தும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

காப்பீடு திட்டம்…. ஜூன் 15 தான் கடைசி தேதி…. வேளாண் இணை இயக்குனர் தகவல்….!!

பிரதம மந்திரியின் காப்பீடு திட்டத்தில் பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் ஜூன் 15 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டுமென வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் வேளாண் இணை இயக்குனர் வெங்கடேஸ்வரர் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, பிரதம மந்திரியின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் குருவை பயிர் காப்பீடு பதிவு செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் , மானாமதுரை, எஸ் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வறுமையில் ஓடும் 100 ஆட்டோக்கள்…. “PETROL “கொடுத்து உதவிய அதிமுக மாணவரணி…!!

அதிமுக மாணவரணி சார்பாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உதவும் வகையில் ஒரு நாளைக்கு தேவையான பெட்ரோல் 100 ஆட்டோக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. கொரோனா தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால்   ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோவை இயக்குவதற்கு அனுமதி இல்லாமல், வேறு வேலைக்கு செல்லவும் முடியாமல் அவர்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்புக்குள்ளானதை தொடர்ந்து, தற்போது ஆட்டோக்களை இயக்குவதற்கு சில நிபந்தனைகளுடன் அரசு அனுமதி அளிக்க, இதனையறிந்து வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் ஆட்டோ […]

Categories
மாநில செய்திகள்

சிவகங்கையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழப்பு!

சிவகங்கையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார். கொரோனா காரணமாக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 70 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சென்னையில் மட்டும் இன்று 3 பேர் கொரோனோவிற்கு பலியாகியுள்ள நிலையில் சிவகங்கையில் ஒருவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சென்னையில் கொரோனாவிற்கு மாநகராட்சி சுகாதார ஊழியர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தேனாம்பேட்டை மண்டலத்தில் கடந்த 7 வருடமாக வேலை பார்த்து வந்துள்ளார். 45 வயதான ஊழியருக்கு 10 நாட்களுக்கு […]

Categories
சிவகங்கை

கொரோனா தொற்று இல்லாத மாவட்டமான சிவகங்கை… பாதிக்கப்பட்டிருந்த 12 பேரும் டிஸ்சார்ஜ்!

கொரோனா தொற்று இல்லாத மாவட்டமான சிவகங்கை மாறியுள்ளது. இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 2,526 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 29 பேர் கோரோனோ வைரஸிற்கு பலியாகியுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாறியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 12 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 11 பேர் ஏற்கனவே குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் கடைசியாக சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் குணமடைந்தார். […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கலங்கிய 7 மாவட்டங்கள்….! ஆரஞ்சு மண்டலமாக மாறியது …..!!

கொரோனா பாதித்த 7 மாவட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு ஆரஞ்சு பகுதிக்கு மாறியுள்ளது. இன்றைக்கு 121 நபர்களுக்கு தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058 ஆக உயர்ந்திருக்கிறது. 1937ஆக நேற்று வரை இருந்த எண்ணிக்கை, இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 2058 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் 103 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். செங்கல்பட்டில் 12 நபர்களுக்கும், நாமக்கல்லில் 3 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்து […]

Categories
சிவகங்கை மாநில செய்திகள்

சிவகங்கையில் மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்ற 10 பேர் குணமடைந்தனர்!

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் நேற்று மட்டும் 60 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,020ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 54.11% பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஆளில்லா வீட்டிற்குள் சாராயம்… காய்ச்சிய பட்டதாரிகள்… 3 பேர் கைது..!!

மானாமதுரையில் ஆளில்லா வீட்டிற்குள் சாராயம் காய்ச்சிய பட்டதாரிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக கடந்த 20 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாத நிலையில், குடிமகன்கள் பலரும் போதைக்காக திக்குமுக்காடி வருகின்றனர். இதனால் 20 வருடங்களுக்கு பிறகு சாராயம் காய்ச்சுவது சிலர் தொடங்கியுள்ளனர். அந்தவகையில் சில தினங்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 300 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் அன்னவாசல், புதூர், செல்லும் வழியில் பூட்டி கிடந்த வீட்டில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேவகோட்டையில் பாட்டியுடன் ஊஞ்சலாடிய சிறுவன்… தூண் சரிந்ததால் ஏற்பட்ட சோகம்…!

தேவகோட்டையில்  ஊஞ்சலில் உறங்கி கொண்டிருந்த  பாட்டி மற்றும் பேரன் இருவர் மீதும் தூண் விழுந்ததில், சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் செல்லப்ப செட்டியார் பிள்ளையார் கோயில் உள்ளது. அக்கோயிலின் தென்பகுதியில் காவலாளி காளிமுத்தன் என்பவர் வசித்துவருகின்றார். காளிமுத்தன்  மனைவி 50 வயதான செல்வி அவ்வீட்டில் இருந்த தூணிலும், அருகில் உள்ள வேப்பமரக் கிளையிலும் இணைத்துக் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் படுத்து கிடந்தார். அப்போது விளையாடிவிட்டு மிகவும் களைப்பாய் வந்த அவரது பேரன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கடன் பெற போலி ஆதார் தயாரிப்பு – மாவட்ட ஆட்சியரிடம் புகார்

பிரவுசிங் சென்டர்களில் போலி ஆதார் கார்டுகள் தயாரித்து கொடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதிகளில் ஆதார் அட்டைகள் பல்வேறு இடங்களில் தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக சிவகங்கை மகளிர் குழுவை சேர்ந்த சிலர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரில் 3000 ரூபாய் கடன் பெற்றுக்கொண்டு சில பிரவுசிங் சென்டர்களில் ஆதார் கார்டை ஸ்கேன் செய்து போட்டோஷாப் மூலம் மாற்றிக் கொள்வதாக கூறப்பட்டுள்ளது. இதை தடுத்து நிறுத்த வேண்டும் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

சிவகங்கை மாவட்டம் – ஊரக மற்றும் ஊராட்சி துறையில் அலுவலக உதவியாளர் வேலை..!!

சிவகங்கை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் அலுவலகர் பணி மற்றும் ஓட்டுநர் பணிக்கான காலி இடங்கள் தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பணிக்கான ஊதியம் மற்றும் பிரிவுகளின் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட காலி இடங்களும் கொடுக்கப்பட்டுள்ளது..! நிர்வாகம் :  தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை – சிவகங்கை மேலாண்மை : தமிழக அரசு மொத்த காலிப் பணியிடம் : 10 பணி: அலுவலக உதவியாளர் – 08 காலிப் பணியிடம்: ஓட்டுநர் – 02 தகுதி : 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். ஓட்டுநர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மோட்டார் வாகன சட்டத்தின் படி செல்லத்தக்க  வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கான சம்பளம்: […]

Categories

Tech |