Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

விறகை திருடிய நபர்…. பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

பெண்ணை அரிவாளால் வெட்டி கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வடவிருக்கை கிராமத்தில் கூலி தொழிலாளி சுப்பையா- சந்திரா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் விறகு வெட்டும் தொழில் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி கடந்த 2012 ஆம் ஆண்டு இருவரும் வெட்டிய விறகை கிருபாலன் என்பவர் திருடி சென்றுள்ளார். இதனை பார்த்ததும் சுப்பையா- சந்திரா தம்பதியினர் கிருபாலணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கோபமடைந்த கிருபாலன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள்…. கடும் பனிப்பொழிவால் பாதிப்பு…. வருத்தத்தில் விவசாயிகள்…!!

கடும் குளிர் காரணமாக நெற்பயிர்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக  கடும் பணிப்பொழிவு நிலவுகிறது. இதனால் சிவகங்கை மற்றும் அதனை சுற்றியுள்ள காரைக்குடி, திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி போன்ற கிராமங்களில் பல ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்கள் கடும் பணியின் காரணமாக தரையில் சாய்ந்தபடி கிடக்கிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் தென்மேற்கு  பருவமழை  அதிக அளவு பெய்ததால் ஏரிகள், குளம் மற்றும் கண்மாய்களில் நீர் நிரம்பிய நிலையில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் புகுந்த மர்மநபர்…. ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

அங்கன்வாடி மையத்திற்குள்  புகுந்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள  தலக்காவயல்   கிராமத்தில்  அங்கன்வாடிமையம் அமைந்துள்ளது. இந்த அங்கன்வாடி மையத்தின்   கதவை உடைத்து நள்ளிரவு நேரத்தில்  உள்ளே புகுந்த  மர்ம நபர்  10 கிலோ அரிசி , முட்டை, சிலிண்டர் அடுப்பு மற்றும் குக்கர் போன்றவற்றை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். மறுநாள் காலை அங்கன்வாடிக்கு சென்ற ஊழியர் முத்துக்கரசி  மர்ம நபர் திருடி சென்றதை அறிந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஓபன் கராத்தே போட்டி…. வெற்றி பெற்ற மாணவர்கள்…. குவியும் பாராட்டுகள்…!!

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை  மாவட்டத்தில் உள்ள  மானாமதுரையில்  நாகர்ஜுன் ஷிட்டோ  ரியூ ஸ்போர்ட்ஸ்  கராத்தே பள்ளி சார்பில் மாநில அளவிலான ஓபன் கராத்தே போட்டி நடைபெற்றுள்ளது. இந்தப் போட்டியில் சிவகங்கை, விருதுநகர், மதுரை, திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருப்பூர் மற்றும் ராம்நாடு போன்ற மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். இதில் மானாமதுரையில் சேர்ந்த நாகர்ஜுன்  ஷிட்டோ ரியூ  கராத்தே பள்ளி மாணவர்கள் 20 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“பாலம் சேதம் அடைந்துள்ளது” புகார் அளித்த சமூக ஆர்வலர்கள்…. ரயில்வே அதிகாரிகளின் நடவடிக்கை….!!!

நான்கு வழி சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தை ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை  மாவட்டத்திலுள்ள மானாமதுரை பகுதியில் 4 வழி சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் சிறு பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய கோரியும், பாலத்தின் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ரயில்வே துறையில் புகார் அளித்தனர். எனவே ரயில்வேதுறை அதிகாரிகள் பாலத்தை ஆய்வு செய்தனர். அந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மார்கழி மாதத்தை முன்னிட்டு…. திருப்பள்ளி எழுச்சி நிகழ்ச்சி…. கோவில்களில் சிறப்பு வழிபாடு…!!

மார்கழி மாதம் என்பதால் பெருமாள் கோவில்களில் திருப்பள்ளி எழுச்சி நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் மார்கழி மாதத்தை முன்னிட்டு  திருப்பள்ளி எழுச்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சவுமிய பெருமாள் கோவில், திருப்பத்தூர் நின்ற நாராயண பெருமாள் கோவில் மற்றும் அரியக்குடியிலுள்ள திருவேங்கடமுடையான் கோவில் போன்றவற்றில்  நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும் பெண்கள் வீட்டு வாசலில் அரிசி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ரோட்டில் சுற்றித்திரியும் பசுக்கள்…. உரிமையாளர்களுக்கு அபராதம்…. அதிகாரியின் எச்சரிக்கை…!!

பசுக்கள் தெருவில் சுற்றித் திரிந்தால் உரிமையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி செயலாளர் எச்சரித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் பேரூராட்சி அலுவலகர் சந்திரகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் பசு மாடுகளை வீட்டில்  கட்டிவைத்து வளர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் பசு மாடுகள் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்தால் அவற்றை பிடித்து அடைப்பதோடு மட்டுமல்லாமல் உரிமையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம்  விதிக்கப்படும்  என அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து  பிடிக்கப்பட்ட […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஊதியம் வழங்கப்படவில்லை… ஒப்பந்த பணியாளர்களின் போராட்டம் … சிவகங்கையில் பரபரப்பு …!!

300-க்கு மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் மருத்துவ கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்தம் அடிப்படையில் 700- க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவலர்கள்  வேலை பார்த்து வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டாக ஊதியம் மற்றும் அரசு அளித்த ஊக்கத்தொகை  வழங்கவில்லை என ஆத்திரமடைந்த 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் நேற்று பணியை புறக்கணித்து விட்டு கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேசிய வாக்காளர் தினம்…. நடைபெறும் பல்வேறு போட்டிகள்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு…!!

தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ஜனவரி 25-ஆம் தேதி கொண்டாடப்படும் வாக்காளர் தினம் பற்றிய பதிவு ஒன்றை  வெளியிட்டிருந்தார். இதில் மாவட்டத்தில் இருக்கும்  அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் 100 சதவீதம் பதிவு, வாக்காளர் உதவி தொலைபேசி செயலி, தூண்டுதல் இல்லாத வாக்கு பதிவு மற்றும் வாக்காளராக எனது பங்களிப்பு போன்ற தலைப்புகளில் போட்டிகள் நடத்த  வேண்டும் என  உத்தரவிட்டுள்ளார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கதர் தொழிற்சாலை…. ஆட்சியரின் நேரடி ஆய்வு…. வரவேற்பை பெற்ற பொருட்கள்…!!

கதர் ஆலையை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டனூர் பகுதியில் கதர் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் உள்ளே சோப், ஆயில் தயாரிக்கும் பிரிவு, காலணிகள் தயாரிக்கும் பிரிவு, மகளிர் சுய உதவிக்ககுழுவினர்  உற்பத்தி செய்யும் பனை ஓலையை பயன்படுத்தி உருவாக்கும்  அழகு சாதனப் பொருள்கள் பிரிவு என அனைத்து பிரிவுகளையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து   ஆலையில் உற்பத்தி செய்த பல்வேறு பொருட்கள் சந்தையில் விற்கப்படுவதாகவும், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோவில் திருவிழாவிற்கு வந்த தம்பி…. அக்காவிற்கு நடந்த கொடூரம்…. சிவகங்கையில் பரபரப்பு…!!

அக்காவை கம்பியால் அடித்து  தம்பி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோனார்பட்டி கிராமத்தில் உதயசூர்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில்  பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் உதயசூர்யாவின்  தம்பியான ஆசைக்கண்ணன் என்பவர் தனது  மனைவியுடன்  கோவில் திருவிழாவிற்காக  சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் உதயசூர்யா ஆசைக்கண்னனை  திட்டியதால் கோபமடைந்த  அவர் அருகில் இருந்த  இரும்பு கம்பியால் தனது  அக்காவை  சரமாரியாக   தாக்கியுள்ளார். இதனால்  படுகாயமடைந்த உதயசூர்யா  […]

Categories
அரசியல்

தடுப்பூசி முகாமில் பிரதமர் படம் இல்லையா? – கொந்தளித்த பாஜகவினர்….!!!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே, தடுப்பூசி தடுப்பு முகாமில் இருந்த பேனரில், பிரதமர் புகைப்படம் இல்லை எனக்கூறி பாஜகவினர் அந்த பேனரை அகற்றியுள்ளனர். கொரோனா தொற்றை தடுப்பதற்காக ஒவ்வொரு வாரமும் தடுப்பூசி முகாம் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த வாரமும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம் கிராமத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் கட்டப்பட்டிருந்த பேனரில் பிரதமர் புகைப்படம் இல்லை என கூறி அந்த பேனரை பாஜகவினர் அகற்றியுள்ளனர். அடுத்து பேனர் வைத்தால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“வீட்டிலேயே கட்டி வையுங்க” உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்…. அதிகாரியின் எச்சரிக்கை…!!

கால்நடைகள் சாலையில் சுற்றி திரிந்தால் உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டனூர் பேரூராட்சி செயல் அலுவலர் உமா மகேஸ்வரன் செய்தி குறிப்பில் கூறியதாவது, பொதுமக்கள் தங்களுக்கு சொந்தமான மாடுகளை வீடுகளிலேயே கட்டி வைத்து பராமரிக்க வேண்டும். இந்த மாடுகள் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக சாலைகளில் சுற்றி திரிந்தால் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் பாதுகாப்பாக அடைத்து வைக்கப்படும். மேலும் உரிமையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதோடு, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய மூதாட்டி…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழமேல்குடி கிராமத்தில் சோலைமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோவில் எதிரில் இருக்கும் வைகை ஆற்றில் இறங்கி கரையை கடக்க முயற்சி செய்த போது வெள்ளத்தில் சிக்கிவிட்டார். அப்போது ஆற்றில் உள்ள செடி, கொடிகளை பிடித்துக்கொண்டு மூதாட்டி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இது யாரா இருக்கும்….? பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை…!!

பாலத்திற்கு அருகே சடலமாக மீட்கப்பட்ட வாலிபரின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பகுதியில் இருக்கும் மகாத்மா காந்தி சாலையில் சிலர் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள பாலத்திற்கு அருகில் ஒருவர் இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த  தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருந்த வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

குளித்துக் கொண்டிருக்கும் போது தண்ணீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசினிப்பட்டி  கிராமத்தில் சபரிநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள கண்மாயில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக  கண்மாயில் அதிகமான தண்ணீர் இருந்துள்ளது. இந்நிலையில் கண்மாயில் குளித்துக் கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு சென்றதால் சபரிநாதன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சபரிநாதனின் சடலத்தை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோலம் போட்டு கொண்டிருந்த பெண்…. வாலிபர்கள் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணிடமிருந்து தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஜீவா நகரில் பாலசுப்பிரமணியம்- தனபாக்கியம் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தனபாக்கியம் வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக  2 வாலிபர்கள் தன பாக்கியத்தின் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து தனபாக்கியம் மானாமதுரை காவல்நிலையத்தில்  புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த தம்பதியினர்…. வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

தம்பதியினரை கட்டிப்போட்டு கொள்ளையடித்து சென்ற குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டனூர் பகுதியில் தட்சணாமூர்த்தி- விசாலாட்சி தம்பதியினர் வசித்து வந்தனர். கடந்த ஜூலை மாதம் 3- தேதி மர்ம நபர்கள் இவர்களின் வீட்டிற்குள் நுழைந்து விட்டனர். அதன் பிறகு தம்பதியினரை கட்டிப்போட்டு வீட்டிலிருந்த 45 பவுன் தங்க நகைகள் மற்றும் 1 1/2 வெள்ளி, 2 1/2 லட்சம் ரூபாய் போன்றவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து தட்சிணாமூர்த்தி காவல் நிலையத்தில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பசுக்களைக் காக்கும் முயற்சி… கழுத்தில் ஒளிரக்கூடிய பெல்ட்டுகள்… சமூக ஆர்வலர்களின் செயல் …!!

கோவில் பசுக்களில் பாதுகாக்கும் பொருட்டு அவற்றின் கழுத்தில் சமூக ஆர்வலர்கள் ஒளிரும் பெல்ட்டுகளை அணிவித்துள்ளனர்.  சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி கிராமத்தில் பிரசித்தி பெற்ற சேகர் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பசுக்கள் உள்ளது. இந்தப் பசுக்கள் இரவு நேரங்களில் சாலையில் சுற்றி திரிகிறது. இதனால் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு சமூக ஆர்வலர்கள் கோவில்  பசுக்களின் கழுத்தில் இரவு நேரங்களில்  ஒளிரக்கூடிய பெல்ட்டை  […]

Categories
சற்றுமுன் சிவகங்கை மாவட்ட செய்திகள்

மேலும் 1 மாவட்டத்தில்…. பள்ளிகளுக்கு மட்டும் லீவு…. சற்றுமுன் அறிவிப்பு…!!!

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை குறிப்பாக திருநெல்வேலி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விழுப்புரம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிவகங்கை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோலம் போட்டு கொண்டிருந்த பெண்…. அதிகாலையில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்து 2 பேர் தங்க நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியில் ஜீவா- தனபாக்கியம்  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில்  அதிகாலை நேரத்தில்  தனபாக்கியம் தனது வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு வாலிபர்கள்  தனபாக்ககியத்தின்  கழுத்தில் இருந்த10 1/2 பவுன் சங்கிலியை   பறித்துக் விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதுக்குறித்து  தனபாக்கியம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

டீசல் நிரப்பிய பெண்…. திடீரென பற்றி எரிந்த கார்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

பெட்ரோல் பங்கில் வைத்து கார் தீப்பிடித்து எரிந்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஊஞ்சனை புதுவயலய் கிராமத்தில் பாண்டியன் என்பவர் வசித்து வந்தார். இவர்  தனது பேரனுடன் தேவகோட்டையில் உள்ள சந்தைக்கு காரில் சென்றார். இந்நிலையில்  திருப்பூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு பாண்டியன்  சென்றுள்ளார்.  அங்கு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த  பெண் காரில் டீசலை  நிரப்பியுள்ளார். இதனை அடுத்து பாண்டியன் தனது காரில் இருந்தபடியே பணத்தை கொடுத்த போது தான் அந்தப்பெண் பெட்ரோலுக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த தங்கை…. புத்திசாலித்தனமாக செயல்பட்ட 14 வயது சிறுமி…. குவியும் பாராட்டு….!!!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த தன் தங்கையை புத்திசாலித்தனமாக செயல்பட்டு காப்பாற்றிய 14 வயது சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் ஆழ்துளை கிணறு ஒன்று மூடப்படாமல் இருந்துள்ளது. அந்தக் கிணற்றுக்குள் சிறுமி ஒருவர் தவறி விழுந்துள்ளார். அதனைக் கண்ட சிறுமியின் சகோதரி ஸ்ரீதேவி (14) உடனடியாக ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த தனது தங்கையின் தலைமுடியை பிடித்து இழுத்துள்ளார். அதன் பிறகு அருகில் இருந்தவர்களை சத்தமிட்டு அழைத்துள்ளார். உடனடியாக […]

Categories
மாநில செய்திகள்

கனமழையால் பயிர்கள் சேதம்…. அரசு செயலர் ஆய்வு….!!

தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு செயலர் லால்வேளா சிவகங்கை மாவட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிவகங்கை ஊரக வளர்ச்சித் துறை அலுவலக வளாக கூட்ட அரங்கத்தில் வைத்து வடகிழக்கு பருவமழை குறித்தும், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை குறித்தும் ஆலோசனை நடத்தினார். அதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர். அந்த ஆலோசனைக் கூட்டத்தில், தொடர் மழையின் போது ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மற்றும் துறைவாரியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பள்ளிகளுக்கு விடுமுறை, டாஸ்மாக் கடைகள் மூடல்….அரசு அதிரடி அறிவிப்பு….!!!

சிவகங்கை மாவட்டத்தில் இன்று மருதுபாண்டியர் பூஜையை ஒட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. மேலும் இன்று டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அம்மாவட்டத்தில் அடைக்கப்படும் என்றும்,இதனை மீறி கள்ள சந்தையில் விற்பனை செய்வது தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களுக்கு பிறகு பள்ளிகள் தற்போது திறக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தடுத்து விடுமுறைகள் அழிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்…. மது பிரியர்களுக்கு ஷாப் நியூஸ்….!!!!

சிவகங்கை மாவட்டத்தில் நாளை மட்டும் 30 ஆம் தேதி மதுக்கடைகளை மூட அம்மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை மருது சகோதரர்கள் குருபூஜை, முப்பதாம் தேதி தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறி கள்ளத்தனமாக மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை….. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு….!!!!

சிவகங்கை மாவட்டத்தில் மருது பாண்டியர், தேவர் குருபூஜை காக அக்டோபர் 27 மற்றும் 30 ஆகிய நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், இளையான்குடி ஒன்றியத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரதோஷத்தை முன்னிட்டு…. சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜை…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடத்தப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் பகுதியில் புஷ்பவனேஸ்வரர்-சௌந்தரநாயகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. அங்கு பிரதோஷத்தை முன்னிட்டு கோவிலில் கொடிமரம் அருகில் உள்ள நந்திக்கு அலங்காரம் செய்யப்பட்டது. இதனையடுத்து சாமியும், அம்பாளும் கோவிலினுள் ஆடி வீதியில் உலா வந்து நந்திக்கு காட்சியளித்தனர். இதனைத் தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு தீபாராதனை செய்யப்பட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்து ஆராதனை செய்யப்பட்டது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. ஓட்டம் பிடித்த மணல் திருடர்கள்…. தீவிர விசாரணையில் போலீசார்….!!

டிராக்டரில் மணல் அள்ளியவர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானாமதுரை பகுதியில் உள்ள வைகை ஆற்றை ஒட்டி கரிசல்குளம், பூக்குளம், கல்குறிச்சி வேதியரேந்தல், கீழப் பசலை, கால் பிரபு ஆகிய பகுதிகளில் மணல் அள்ளும் எந்திரங்கள் மூலம் லாரிகளில் மணல் கடத்துகின்றனர். கடந்த சில மாதங்களாக செங்கோட்டை கால்பிரபு, கல்குறிச்சி, வேதியரேந்தல், பூக்குளம் ஆகிய பகுதிகளில் மினிவேன்கள் மற்றும் சாக்குமூட்டையில் தலைச்சுமையாக மணல் கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதல்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

அரசு பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிங்கம்புனரி காவல் நிலையம் அருகில் உள்ள சோதனைச்சாவடி முன்பு சொக்கலிங்கபுரம் சாலை நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த முதியவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் சிங்கம்புணரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நவராத்திரியை முன்னிட்டு…. சுவாமிக்கு ரூபாய் நோட்டு அலங்காரம்…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்ட சித்தர் முத்துவடுகநாதரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். நவராத்திரியை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிங்கம்புணரி பகுதியில் சித்தர் முத்துவடுகநாதர் கோவில் அமைந்துள்ளது. அங்கு நவராத்திரியை முன்னிட்டு சித்தர் முத்துவடுகநாதருக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனையடுத்து ரூபாய் நோட்டுகளால் சுவாமிக்கு மகாலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது. இதனை பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சித்தர் முத்துவடுகநாதரை தரிசனம் செய்தனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.வையாபுரிபட்டி பகுதியில் தயாநிதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகன் விக்னேஸ்வரனுடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது செல்லியம்பட்டி அருகில் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி தயாநிதி தவறி கீழே விழுந்துள்ளார். இதில் தயாநிதிக்கு தலையின் பின்புறம் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரது மகன் விக்னேஸ்வரன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

செம ஆஃபர்…. வெறும் 10 பைசாவுக்கு ஒரு பார்சல் பிரியாணி…. முந்தியடித்து கொண்டு ஓடிய பிரியாணி பிரியர்கள்….!!!!

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி அண்ணா சிலை அருகில் ராவுத்தர் கல்யாண வீட்டு பிரியாணி என்ற பெயரில் புதிய ஹோட்டல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதில் தொடக்கவிழா சலுகையாக முதல் 200 நபர்களுக்கு பழைய பத்து பைசா நாணயம் கொண்டு வந்தால் ஒரு பிரியாணி பொட்டலம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடையின் முன்பு பிரியாணி பிரியர்கள் குவிய தொடங்கினர். முதலில் பத்து பைசா நாணயம் கொண்டுவந்த 300 பேருக்கு ஒரு பிரியாணி தாழ்ச்சா, தயிர் வெங்காயம், பாசிப்பருப்பு பாயாசம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகறாறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள மதகுபட்டி பகுதியில் பிடாரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோகிலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனவேதனை அடைந்த கோகிலா திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த கணவர் மற்றும் அக்கம் பக்கத்தினர் கோகிலாவை உடனடியாக மீட்டு தனியார் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோவிலில் வைத்திருந்த நகை…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பூசாரி…. போலீஸ் வலைவீச்சு….!!

கோவிலில் நகை, வெள்ளி வேல் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இரவுசேரி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஆதினமிளகி அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பாதுகாப்பு பணிக்காக 3 இரவு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அன்று காவலர்கள் பணிக்கு வரவில்லை. இந்த கோவிலில் உள்ள ஆதினமிளகி அய்யனாரை அப்பகுதியில் வசிக்கும் சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தெய்வமாக வணங்கி வருகின்றனர். இந்நிலையில் பூசாரி பூஜைகளை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த முதியவர்…. மோட்டார் சைக்கிளால் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி பகுதியில் முகமது பாருக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இளையான்குடி கண்மாய் கரை அருகில் உள்ள பள்ளிவாசல் செல்லும் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று முகமது பாருக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முகமது பாருக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள மாவிடுதிக்கோட்டை பகுதியில் மைக்கேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பால்ராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு பவுலின் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் பால்ராஜ் மாவிடுதிக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பால்ராஜின் மீது மோதியது. இந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்…. தமிழகத்தில் அதிரடி அறிவிப்பு….!!!

சிறுபான்மையின மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் இஸ்லாம், கிறிஸ்துவம், சீக்கியம், புத்தம், பார்சி மற்றும் ஜைன மதத்தை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு பள்ளிப்படிப்பு […]

Categories
அரசியல்

பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால்…. தேர்தலில் தோல்வி உறுதி…. கார்த்தி சிதம்பரம் பொளேர்…!!!

காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துக் கொண்டால் தேர்தலில் தோல்வியை சந்திக்கும் என கூறியிருப்பது மிகவும் சர்ச்சையாகி உள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தபோது, “பாஜகவிற்கு இந்தி பேச தெரியாத மக்கள் மீது அக்கறை ஏதும் இல்லை. மேலும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தக் கூடாது என்ற முடிவில் பாஜக இருக்கின்றது. பாஜகவினர் தேர்தல் நடத்தும் உத்திகளில் மிகவும் திறமையானவர்கள். ஆனால் அவர்களுக்கு அரசை நடத்தும் திறமை இல்லை. மத்திய […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நிலப்பிரச்சனையால் முன்விரோதம்….. பா.ஜ கட்சியின் பிரமுகர் கொலை…. சிவகங்கையில் பரபரப்பு…!!

பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரை கிராமத்தில் கதிரவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தேவகோட்டை ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கின்றார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு தருண் என்ற மகள் இருக்கிறார்.  இந்நிலையில் கதிரவனுக்கும், பெரியசாமி என்பவருக்கும் இடையே நிலப் பிரச்சனை காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் காவன்வயல் விலக்கு அருகில் இருக்கும் சாலையோர […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா! 14 அடி கயிற்றில் 23 நொடிகளில் ஏறி…. 5 வயது சிறுவன் புதிய சாதனை…!!!

சிவகங்கை மாவட்டம் சூரக்குளம் கிராமத்தை சேர்ந்த தம்பதிகள் வினோத்குமார்- கற்பகவல்லி இவர்களுடைய மகன் சாலிவாகனன்(5). இந்த சிறுவன் சிறு வயதிலேயே தன்னுடைய அம்மாவின் சேலையை மரத்தில் கட்டி ஏறி விளையாடி வந்துள்ளார். இதனை கண்ட அவருடைய பெற்றோர்கள் ஊக்கப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் தற்சமயம் அந்த சிறுவன் கயிற்றில்  வேகவேகமாக ஏறி பயிற்சி பெற்றதுடன் தற்போது  14 அடி கயிறில் 23 நொடிகளில் ஏறி சோழன் புக் ஆப் ரெக்கார்டஸ் இல் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக இந்தியா […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த போது…. மாணவிக்கு நேர்ந்த கொடுமை…. கைது செய்த காவல்துறையினர்….!!

10 – ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்புவனம் பகுதியில் 10 – ஆம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் ஆவரங்காடு பகுதியில் கல்லூரி மாணவரான அருண்பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக அருண்பாண்டியனுக்கும் 10 – ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கும் இடையே பழக்கம் இருந்து வந்துள்ளது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை யாரு எடுத்திருப்பா….? அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

ஏசி எந்திரத்தில் காப்பர் வயர்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேவகோட்டை பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏசி எந்திரங்களின் பின்னாலுள்ள காப்பர் வயரை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதேபோன்று வணிக வளாகத்தின் எதிரே உள்ள கண்டதேவி சொர்ணலிங்கம் என்பவரின் பழைய இரும்பு கடையில் வைத்திருந்த காப்பர் வயர்களை மர்மனப்வர்கள் சிலர் திருடிச் சென்றுள்ளனர். இந்த காப்பர் வயரின் மொத்த மதிப்பு ரூ. 15 ஆயிரம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எதிர்பாரா விபத்து…. தடுப்பு சுவரில் மோதிய மோட்டார் சைக்கிள்…. வாலிபர் உயிரிழப்பு….!!

சாலை தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்புவனம் பகுதியில் ஹக்கீம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுரையில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் ஹக்கீம் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து மணலூர் அருகே சென்று கொண்டிருக்கும்போது சாலை தடுப்பு சுவர் மீது மோட்டார்சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் ஹக்கீம் தூக்கி வீசப்பட்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

என்னது ரசாயனம் தடவியிருக்காங்களா….? நடைபெற்ற திடீர் சோதனை…. அதிகாரிகளின் அதிரடி உத்தரவு….!!

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இறைச்சி விற்பனை கடைகளில் ரசாயனம் தடவி வைக்கப்பட்டிருந்த மீன்களை பறிமுதல் செய்தனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் ஆடு, மாடு, கோழி, நண்டு போன்ற இறைச்சிகள் விற்பனை விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகமாக இருக்கும். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று இறைச்சிகள் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனையடுத்து இறைச்சி கடைகளில் திடீரென மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் பிரபாவதி தலைமையிலான குழு, காவல்துறையினர், நகராட்சி சுகாதார அதிகாரிகள் ஆகியோர் தீவிர […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதுக்காக இப்படியா பண்றது….? வாலிபருக்கு நடந்த கொடூரம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

தொழில் போட்டியால் வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேவகோட்டை பகுதியில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தென்னரசு என்ற மகன் இருந்துள்ளார். மேலும் சிவனூர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தென்னரசும், மணிகண்டனும் பொக்லைன் எந்திரத்தை வாடகைக்கு எடுத்து ஓட்டி வந்தனர். இதில் இருவருக்கும் இடையே தொழில் போட்டி இருந்து வந்துள்ளது. இந்நிலையில் செலுகை பகுதியில் தென்னரசு, அவரது அண்ணனான காளிதாஸ் மற்றும் நண்பர்களான […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

SHOCKING: குடிகார கும்பலால் நடந்த விபரீதம்…. கொல்லப்பட்ட மருத்துவ மாணவர்கள்…. சிதைக்கப்பட்ட கனவு….!!!

சிவகங்கை மாவட்டத்தில் தங்களது இடத்தில் அமர்ந்து மது அருந்துவதை தட்டிக் கேட்டதால் குடிகார கும்பலால் தாக்கப்பட்ட மற்றொரு மருத்துவ மாணவரும் உயிரிழந்துள்ளார். மருத்துவர்களாக பார்க்க ஆசைப்பட்ட மகன்கள் இருவரையும் சடலமாக பார்த்து அவர்களது தாய் கதறிய காட்சி கலங்க வைத்துள்ளது. சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு அருகே முத்து நகரை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் இருதயராஜ். இவரது மகன்களான ஜோசப் சேவியர், கிரிஸ்டோபர் ஆகிய இருவரும் பிலிப்பைன்ஸ் நாட்டில் எம்பிபிஎஸ் படித்து வந்தனர். கொரோனா காரணமாக சொந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“அதுக்கு இப்படியா செய்யணும்” மகன் செய்த வேலை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

இடத் தகராறு காரணமாக சொந்த சித்தப்பாவையே கொலை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்துள்ளார். இந்நிலையில் இவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இடமானது கழனிவாசல் பகுதியில் அமைந்துள்ளது. இதனையடுத்து ஆறுமுகத்தின் உறவினர்கள் இந்த இடத்தை விற்று பங்கு பிரித்துக் கொண்டுள்ளனர். அந்த பங்கில் ஆறுமுகத்தின் அண்ணன் பெருமாள் என்பவரின் மூன்றாவது மகன் சரவணனுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டிய இருந்துள்ளது. மேலும் சரவணன் இந்த பணத்தை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“அரசு மானியம்” மாவட்ட ஆட்சியரின் ஆய்வு…. கலந்து கொண்ட அரசு அதிகாரிகள்….!!

தென்னை நாற்றுப்பண்ணையில் மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு அரசு அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி தாலுகாவுக்கு உட்பட்ட எஸ்.வி மங்கலம் ஊராட்சியில் தென்னை நாற்றுப்பண்ணை வேளாண்மை துறையின் மூலம் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்து அங்கு வளர்க்கப்படும் தென்னை ரகங்களை பார்வையிட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறும்போது இந்த அரசு பண்ணையில் பயிரிடப்படும் தென்னங்கன்று இரகங்கள் வாரியாக விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது எனவும் தென்னை வளர்ச்சி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“அது கண்டிப்பாக இருக்க வேண்டும்” அதிகாரிகளின் திடீர் ஆய்வு…. உபகரணங்கள் பறிமுதல்….!!

முத்திரையிடப்படாத எடைக்கற்கள் உள்ளிட்ட 92 உபகரணங்களை வாரச்சந்தையில் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியில் இருக்கும் வாரச் சந்தையில் வியாபாரிகள் முத்திரையிடப்படாத எடைக் கற்களை பயன்படுத்தி வருவதாக தொழிலாளர் நலத்துறைக்கு அடிக்கடி புகார்கள் வந்துள்ளது. இந்நிலையில் தொழிலாளர் நலத்துறை ஆணையரான ராஜ்குமாரின் தலைமையில் உதவி ஆய்வாளரான கதிரவன், செந்தில், பிரியதர்ஷினி, செல்வராஜ் உள்ளிட்டோர் அடங்கிய குழு வாரச்சந்தையில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையில் முத்திரையிடப்படாத எடை கற்களை வியாபாரிகள் பயன்படுத்துகின்றனரா என […]

Categories

Tech |