சாமி சிலைகள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த ரஜினி ரசிகர் மன்ற இணை செயலாளரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் அலெக்சாண்டர் (வயது 52) என்பவர் வசித்து வருகின்றார். பா.ஜ.க. நிர்வாகியான இவர் கோவில் சிலைகளை பதுக்கி வைத்திருப்பதாகவும் அதனை ரூ.5 கோடிக்கு விற்பனை செய்ய முயற்சிப்பதாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 3-ந் தேதி […]
