தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அந்த வகையில் 5 சிறை கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் புழல் உட்பட 5 சிறைச் சாலைகளுக்கு புதிதாக கண்காணிப்பாளர்களை தமிழக அரசு நியமித்துள்ளது. கடலூர் சிறை […]
