பிரேசிலில் சிறுவர் பள்ளியில் இளைஞர் ஒருவர் நுழைந்து நால்வர் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலில் சாண்டா கேதரினா மாகாணத்தில் அமைந்துள்ள சிறுவர் பள்ளியில் இளைஞர் ஒருவர் கத்தி ஒன்றுடன் நுழைந்து குழந்தைகளின் மீதும், தடுக்க முயன்றவர்களின் மீதும் தாக்குதலை நடத்தினார். பின்னர் தன்னை தானே குத்திக் கொள்ளவும் முயன்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ராணுவ காவல்படையினர் அவரை கைது செய்தனர். பின்னர் காயமடைந்த குழந்தை ஒருவரையும், உயிரிழந்த நால்வரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் […]
