நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான பதிவு மத்திய அரசின் கோவின் இணையதளத்தில் புத்தாண்டு அன்று தொடங்கியது. சிறார்களுக்கு உள்நாட்டு தயாரிப்பான கோவக்சின் செலுத்தப்பட உள்ள நிலையில், தடுப்பு ஊசி செலுத்தி 30 நிமிட கண்காணிப்பில் வைத்து பின்னர் அவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. […]
