விளையாடச் சென்ற சிறுவன் கடலுக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாதவன் காலனி பகுதியில் ரமேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 4 வயதுடைய மாதவன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சிறுவனான மாதவன் தனது பெற்றோரிடம் வீட்டு பக்கத்தில் விளையாடி விட்டு வருவதாக கூறி சென்று நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் தனது உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடியும் சிறுவனான மாதவன் கிடைக்கவில்லை. […]
