கிணற்றுக்குள் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கண்ணமங்கலம் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணீஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விளையாடிக் கொண்டிருந்தபோது வீட்டிற்கு அருகே இருக்கும் கிணற்றில் மணீஷ் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துவிட்டான். இதனை அடுத்து சிறுவனை காணவில்லை என அவரது பெற்றோர் அனைத்து இடங்களிலும் தேடி அலைந்துள்ளனர். அப்போது கிணற்றுக்கு அருகில் கிடந்த மணீஷின் காலணிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக தீயணைப்பு […]
