சரியாகப் படிக்கவில்லை என்று கூறி சிறுவனை தாக்கிய பள்ளி ஆசிரியர் மீது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். சென்னை, பெரவள்ளூர் ஜி.கே.எம் காலனியில் வசித்து வருபவர் பழனிச்சாமி. இவருடைய மனைவி டெய்சி ராணி. இந்த தம்பதிகளுக்கு சச்சின் (6) என்ற மகன் உள்ளார். சச்சின் பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறான். இந்த நிலையில் சச்சின் சரியாக படிக்கவில்லை என்று கூறி அவரது பள்ளி ஆசிரியை பிரான்சி என்பவர் கடுமையாக சிறுவனை தாக்கியுள்ளார். இந்த […]
