சிறுமியை கடத்திய குற்றத்திற்காக ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளிக்கு சென்ற சிறுமி வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே சிறுமியை பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால் சங்கராபுரம் காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த […]
