சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விடுதி உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் வசித்த சாந்தா என்பவர் 15 வயது சிறுமி ஒருவரை வீட்டு வேலைக்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அழைத்து சென்றார். பின் அந்த சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் பெற்றோரிடம் சாந்தா ஒப்படைத்துள்ளார். இதைத்தொடர்ந்து ஜெயங்கொண்டம்அரசு ஆஸ்பத்திரியில் சிறுமியின் பெற்றோர் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அப்போது சிறுமியை பரிசோதித்த டாக்டர் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். இதனால் […]
