செங்கல் சூளையில் வேலை பார்த்த 3 சிறுமிகள் உட்பட 11 பேரை அதிகாரிகள் மீட்டனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நாரணபுரி மாவட்டத்தை சேர்ந்த 14 வயதிற்குட்பட்ட மூன்று சிறுமிகள் திடீரென காணாமல் போய்விட்டனர். இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அந்த மாவட்ட போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதனையடுத்து சிறுமிகளின் செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்திய போது, அவர்கள் கரூர் மாவட்டத்தில் இருப்பது தெரியவந்தது. இதனால் சத்தீஸ்கர் மாநில சமூக நல அலுவலர்கள் […]
