குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக போராடிய சிறுபான்மை மக்கள் மீது வழக்கு செய்திருப்பது கண்டனத்துக்குரியது என்று திருப்பூர் மாவட்ட திமுக செயலாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார். திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திருப்பூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் செல்வராஜ் செய்தியாளர்களிடம் பேசியதாவது, திருப்பூரில் அனைத்து பகுதிகளிலும் உள்ள பொதுமக்களை திமுகவினர் சந்தித்து வருகின்றனர். லட்சக்கணக்கான மக்கள் அதிமுகவை நிராகரிப்போம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி அவர்கள் திமுகவே […]
