குஜராத்தில் சிறுநீரக கற்களுக்கு பதிலாக நோயாளியின் சிறுநீரகத்தை அகற்றிய வழக்கில் மருத்துவர் 11.25 லட்சம் இழப்பீடு வழங்கமாறு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு சிறுநீரகத்தில் கற்கள் தொடர்பான பிரச்சினைக்காக கே.எம்.ஜி மருத்துவமனையில் தேவேந்திர பாய் ரவால் என்பவர் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு மருத்துவர்கள் சிறுநீரக கற்களை அகற்றுவதற்கு பதிலாக சிறுநீரகத்தை அகற்றினர். மேலும் நோயாளியின் நலன் கருதியே இவ்வாறு செய்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் சிறுநீர் கழிக்க முடியாமல் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சனையால் நான்கு மாதங்களில் ரவால் […]
