செங்கல்பட்டு சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் நவீன தரவு மையத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தின் மூலம் ரூ.500 கோடியில் நவீன தரவு மையம் கட்டப்படவுள்ளது. இந்த நவீன தரவு மையம் ( Smart Data Centre) வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்ள துணைபுரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
