கால்களில் வலுவில்லாத மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கான வாகனத்தை பெற விண்ணப்பிக்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பது, “நடப்பு நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட கால்களில் முழுமையான வழுவில்லாத மாற்றுத்திறனாளிகளுக்கும் அதற்காக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படும். இதனை பெறுவதற்கு மாற்றுதிறனாளிகள் விண்ணப்பிக்கலாம். முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு கால்களில் முழுமையாக வலுவில்லாத மாற்றுத்திறனாளிகள்,மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அலுவலக […]
