சென்னை புறநகர் ரயில்களில் நவம்பர் 23ஆம் தேதி முதல் பெண்கள் பயணிக்கலாம் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. முழு ஊரடங்கு காரணமாக பயணிகள் ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு இருந்தது. அதன்பிறகு பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று சிறப்பு ரயில்கள், அத்தியாவசிய அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்காக மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நவம்பர் […]
