தமிழகத்தில் வருகிற அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் இப்போது இருந்தே ரயில்களில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதோடு, சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மதுரை ரயில்வே கோட்டம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. தாம்பரத்திலிருந்து அக்டோபர் 22-ஆம் தேதி இரவு 10:20 மணிக்கு புறப்படும் ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், […]
