தமிழகத்தில் கொரோனா பரவலோடு டெங்கு மற்றும் இன்ஃப்ளுயன்சா காய்ச்சலும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த புதன்கிழமை மாநிலம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் சென்னையில் மட்டும் 100 முகாம்கள் நடத்தப்பட்டது. அதன் பிறகு பூந்தமல்லி மற்றும் கொலப்பன்சேரி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மருத்துவ முகாம்களை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதன்பின் அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, பருவநிலை மாறுபாட்டின் காரணமாக […]
