கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் கூட்டரங்கில் மாற்றத்தை உருவாக்குபவள் என்ற பெயரில் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டமானது தேசிய மகளிர் அணி சார்பில் நடத்தப்படுகிறது. கடந்த 22-ம் தேதி தொடங்கப்பட்ட கூட்டமானது 3 நாட்களுக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு நகரியல் பயிற்சி மையம் செய்துள்ளது. இந்த கூட்டத்தில் 6 மாநகராட்சி பெண் மேயர்கள், 3 நகராட்சி பெண் துணை தலைவர்கள் மற்றும் 16 பெண் நகராட்சி […]
