வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்க அமைக்கப்பட்ட சிறப்பு குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை தலைமை செயலகத்தில் தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதற்கான சிறப்பு குழு கூட்டம் தொடங்கியுள்ளது. தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அரசு அதிகாரிகள், அயல்நாட்டு பிரதிநிதிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தி வருகிறார். வெளிநாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை ஈர்ப்பதற்கான குழுவும் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். தமிழக அரசு அமைத்த சிறப்பு குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. […]
